Just In
- 4 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 6 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 8 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 11 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த அறிவிப்பை மோடி திடீரென வெளியிட காரணம் இதுதான்... ஸ்கெட்ச் யாருக்குனு இப்போ தெரியுதா?
மோடி திடீரென வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று, ஒரு சிலரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. குறிப்பாக மும்பை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வரலாற்றில் முதல் முறையாக 90 ரூபாயை கடந்ததால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆனால் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது. என்றாலும் தற்போது உள்ள விலையும் அதிகம் என்பதே வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டு. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயரலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவாக இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது.
கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்தால், பெட்ரோல், டீசலின் விலை மீண்டும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து விடும். பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, பால் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் வழிவகுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அவ்வப்போது எழும் இப்பிரச்னைக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ஒரே தீர்வாக கருதப்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவும் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
அதாவது இந்தியாவிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லாத காரணத்தால், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை செலவிடுவதால், இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதே சமயம் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்துகின்றன.
இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும் என கருதப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து இந்தியாவின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும்.
அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. எனவே சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம். இதுபோன்ற காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், பிரதமர் நரேந்திர மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில் 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பதால், அவற்றை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பெரும்பாலான உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
அப்படி இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களுக்கு மத்திய அரசு அதிகப்படியான இறக்குமதி வரியை விதித்து வந்தது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் உதிரி பாகங்ளுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த கோரிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. ஆம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் எலெக்ட்ரிக் வாகனங்களின் சில உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி தற்போது 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், எலெக்ட்ரிக் கார், எலெக்ட்ரிக் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் விலை தற்போது இருப்பதை காட்டிலும் கணிசமாக குறைவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அசெம்பிள் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
எனவே மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM-Society of Indian Automobile Manufacturers), மத்திய அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டுள்ளது.
இனி வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் என்பதால், அவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து, கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என மத்திய அரசு கருதுகிறது.
ஆனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை ஒரே அடியில் குறைத்து விடுவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லாத விஷயம். அதற்கு இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எனவே அவற்றையும் மத்திய அரசு கருத்தில் கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு, ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், பெட்ரோல் வளம் மிக்க நாடுகளை கவலையடைய செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த சூழலில் பேட்டரி செல்லுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு பூஜ்ஜியத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்திருப்பது மட்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை மட்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் பேட்டரி செல் உற்பத்தியாளர்கள் பெரிய அளவில் இல்லாததால், அதனை இறக்குமதிதான் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே இறக்குமதி வரியை குறைக்காவிட்டால், எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களிடையே கொண்டு சென்று சேர்ப்பது கடினம்.
எனவேதான் பேட்டரி செல்லுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியிருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் வரிகளை குறைக்க அல்லது பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!