Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!
சிட்ரோன் நிறுவனம் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி தவிர்த்து மூன்று புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கருதப்படும் கார் மாடல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
முதல் மாடல்
சென்னையில் நடந்த விழாவில் சிட்ரோன் நிறுவனம் தனது சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை முதலாவது மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. அதேபோன்று, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும்.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த மாடலானது ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், ஹூண்டாய் டூஸான் மற்றும் விரைவில் வரும் எம்ஜி ஹெக்டர், கியா எஸ்பி2 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு நிகரானதாக இருக்கும். இந்த எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல் தேர்வுகளில் கிடைக்கும். தமிழகத்தில்தான் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.
சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ்
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு அடுத்ததாக இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது மாடல் சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவி. இந்த எஸ்யூவி பெரும் ஆவலை ஏற்படுத்துவதற்கான காரணம், சிட்ரோன் நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி தேர்வாக இருக்கும். அதாவது, 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான நீளமுடைய, காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக இருக்கும்.
சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த எஸ்யூவியும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.
சிட்ரோன் சி4 ஏர்க்ராஸ்
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் மாடலைவிட குறைவான விலையில் வர இருக்கும் மாடல். அடுத்த தலைமுறை சி4 ஏர்க்ராஸ் எஸ்யூவிதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது சி3 ஏர்க்ராஸ் காரின் கூடுதல் வீல் பேஸ் கொண்ட மாடலாக இருக்கும். சீனாவில் தற்போது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
அதாவது, சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள் கூடுதல் பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் உள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ் மற்றும் ரெனோ டஸ்ட்டர் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.
சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் கார்
இறுதியாக தனது சி3 ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சிட்ரோன் திட்டமிட்டுள்ளது. அதாவது, அடுத்த தலைமுறை மாடல் இந்தியாவில் வரும் என்று தெரிகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
உற்பத்தி
சிட்ரோன் கார்கள் அனைத்தும் சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. மேலும், எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகிய முக்கிய பாகங்கள் ஓசூரில் அமைக்கப்பட்டு இருக்கும் ஆலையிலிருந்து சப்ளை பெறப்பட இருக்கிறது. இந்த ஆலையில் ஏற்கனவே எஞ்சின் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் கார்கள் மற்றும் எஞ்சின் உள்ளிட்ட உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்யவும் சிட்ரோன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.