மீண்டும் பலகோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் மீண்டும் பல கோடி ரூபாய் செலவு செய்து, புதிய ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் யார், எவ்வளவு செலவு செய்து புதிய காரை வாங்கியுள்ளார் என்பது குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

கால்பந்து விளையாட்டிற்கு பெரிதும் வரவேற்பு இல்லாத இந்தியா போன்ற சில நாட்களில் கூட, அப்போட்டியை ரசித்து பார்க்க வைக்கும் வகையில், சிலரின் விளையாட்டு திறன் மிகவும் அபாரமானதாக இருக்கின்றது. அந்தவகையில், தற்போதைய தலைமுறையினர் மத்தியில் ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் ஆகிய மூன்று பேர் தலைசிறந்த வீரர்களாக இருக்கின்றனர்.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

இவர்களில் பெரும் புகழ்வாய்ந்தவராக, போர்ச்சுக்கலைச் சேர்ந்த கிறிஸ்டியானா ரொனால்டோ இருக்கிறார். இவர் சிறு வயதில் மிகவும் வருமையான சூழ்நிலையில் வாழ்ந்தவர் என கூறப்படுகிறது. தற்போது 34 வயதை பூர்த்திச் செய்திருக்கும் ரொனால்டோ, தனது 15 வயதில் சீரற்ற இதய துடிப்பு வியாதியால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இந்த வியாதியை அவரது, கால் பந்து விளையாட்டின்மீது வைத்திருந்த ஆர்வத்தைக் கொண்டு வென்றதாக கூறப்படுகிறது.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

இவர்தான் தற்போது போர்ச்சுகள் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். மேலும், இவர் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது, ஸ்போர்ட்ஸ்களில் விளையாடி வரும் வீரர்களிலேயே அதிகம் விலையைக் கொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் இவராவார்.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

அவ்வாறு, மான்செஸ்டர் கழகத்திலிருந்து ரொனால்டவோ ஏலத்தில் எடுத்த ரியல் மாட்ரிட் டீம், இவருக்கு 132 மில்லியன் அமெரிக்க டாலர்களை வாரி வழங்கியுள்ளது. இது மட்டுமின்றி இவர் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ. 750 கோடிக்கும் அதிகமாக சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு, இவர் சம்பாதிக்கும் வருமானத்தின் பெரும் பங்கினை ஆடம்பர கார்களை வாங்க பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

அந்த அளவிற்கு ரொனால்டோவிற்கு ஆடம்பரம் மற்றும் சொகுசு கார்கள் மீது அதிகம் ஆர்வம் எனக் கூறப்படுகிறது. இதனை உறுதிச் செய்யும் வகையில் ரொனால்டோவின் கராஜில், ஏகப்பட்ட விலையுயர்ந்த சொகுசு கார்களின் அணி வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

இந்நிலையில், ரொனால்டோ கூடுதலாக ஓர் சூப்பர் காரை புதிதாக வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை, ரூ. 6.6 கோடி மதிப்பிலான, லிமிடெட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் மெக்-லாரன் சென்னா சூப்பர் காரைத்தான், ரொனால்டோ வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Enjoy 😉👌🏻

A post shared by Cristiano Ronaldo (@cristiano) on

முன்னதாக, ரொனால்டோ குறித்த ஓர் தகவல் ஆட்டோதுறையின் தலைப்பு செய்தியாக மாறியது. அந்தவகையில், உலகின் அதிக விலையுயர்ந்த காரான புகாட்டி லா வாய்ச்சூர் நோய்ரி காரை வாங்கியதாக வதந்தி ஒன்று பரவியது. இந்த கார் இந்திய மதிப்பில் அனைத்து வரிகளைச் சேர்த்தோமானால், ரூ. 131 கோடியைத் தொட்டுவிடும்.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

ஸ்போர்ட்ஸ் மாடல் காரான புகாட்டி லா வாய்ச்சூர் நோய்ரி, மணிக்கு 260 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது, மணிக்கு 418 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனைக்கொண்டது. இந்த காரை புகாட்டி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு, ஜெனிவாவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்திருந்தது.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

ரொனால்டோ மீது, இந்த வதந்தி பரவுவதற்கு புகாட்டி நிறுவனமும் ஓர் முக்கிய காரணம் ஆகும். ஏனென்றால், இந்த காரை வாங்க ஓர் பிரபலமான நபர் புக் செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், அதை வங்கியவர் குறித்த தகவலை வெளியிடவில்லை. இதனால், அனைவரின் பார்வையும் ரொனால்டோ பக்கம் திரும்பியது.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

ஏனென்றால், ரொனால்டோ சொகுசு கார்களின் பிரியர்களின் மன்னனாக இருந்து வருபவர் என்பது உலகமே அறிந்த விசயம். ஆகையால், பல தரப்பில் இருந்து யூகங்களாக இந்த தகவல் பரவ ஆரம்பித்தது. ஆனால், இதற்கு ரொனால்டோவின் அலுவலகம் முழுமையான மறுப்பைத் தெரிவித்திருந்தது. அதேசமயம், தற்போது வரை அந்த காரை யார் வாங்கியது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான வெளிாகவில்லை.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

இந்நிலையில்தான், கிறியஸ்டினா ரொனால்டோ மெக்லாரன் சென்னா காரை வங்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் ரகத்திலான இந்த சென்னா கார், மூன்று எடிசன்களாக ஆன்லைனில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, அந்த நிறுவனம் எஃப்1 மற்றும் பி1 என்ற வெர்ஷன்களையும் விற்பனைச் செய்து வருகிறது. இவற்றை அந்த நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்திருந்தது.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

மெக்லாரன் நிறுவனத்தின் இந்த சென்னா கார், அதிகபட்சமாக மணிக்கு 335 கிமீ வோகத்தில் செல்லக்கூடிய திறனைப் பெற்ற காராக இருக்கின்றது. அதேசமயம், இந்த கார் வெறும் 2.8 செகண்ட்டில் 100 கிமீ வேகத்தைத் தொட்டுவிடும். இந்த கார் தற்போது குறிப்பிட்ட அளவில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

இந்த காரில் மெக்லாரன் நிறுவனம், ட்வின் டர்போசார்ஜ் திறன் கொண்ட, 4 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜினைப் பொருத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 800 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 800 என்எம்ம டார்க்கையும் வழங்கும் திறனைக்கொண்டுள்ளது. இத்துடன் இந்த காரில் ட்வின் க்ளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

மெக்லாரன் நிறுவனம், அதன் கார்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வழங்குவதில்லை. ஆனால், இந்த நிறுவனத்தின் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், அந்த நிறுவனத்தின் கார்களை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்துகொள்ளலாம்.

மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்.... யார் என தெரிந்தால் அதிர்ச்சி நிச்சயம்...

அவ்வாறு, நாட்டின் பல செல்வந்தர்கள் இந்த காரை வாங்கி வருகின்றனர். அந்தவகையில், ரேமண்ட் நிறுவனத்தின் கௌதம் சிங்கானிய உட்பட சிலர் இந்த காரை இந்தியாவில் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cristiano Ronaldo Buys Rs. 6.6 Crore Limited Run McLaren Senna Supercar. Read In Tamil.
Story first published: Monday, June 3, 2019, 16:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X