அடடா இந்த வாகனத்துக்கும் வச்சுட்டாங்களா ஆப்பு: புதிய உத்தரவால் நடவடிக்கைக்கு தயாராகும் போலீஸ்!!!
ஐகோர்ட் பிறப்பித்த புதிய உத்தரவின் காரணமாக, போலீஸார் தங்களுடைய வேட்டையை துரிதப்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இதற்கு, அந்த வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. ஆகையால், தற்போது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதிலும், மிக முக்கியமாக பயன்பாட்டில் இருக்கும் மிக பழைய வாகனங்களை ஒழித்துகட்டும் வகையிலான முயற்சியில் சில மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன. அந்தவகையிான, முயற்சியினைதான் மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் எடுத்து வருகின்றன.

அதேசமயம், ஆஃப்டர் மார்க்கெட் எனப்படும் வெளிப்புறச் சந்தையில் கிடைக்கும் பாகங்களைக் கொண்டு தயாரகும், மாடிஃபிகேஷன் வாகனங்களுக்கு எதிராகவும் அதிரடியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள், ஹை பிரிஷ்ஷர் கொண்ட ஹார்ன் மற்றும் அதிக ஒலியை எழுப்பும் சைலென்சர் பொருத்திய வாகனங்களுக்கு எதிராக அதிரடிகாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், புது டெல்லி உயர்நீதிமன்றம், ஜூகாத் வாகனம் (கலப்பின வாகனங்கள்) என அழைக்கப்படும் ஹைபிரிட் ரிக்ஷா-விற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (ஜூலை 24) அன்று நடைபெற்ற பொதுநல மனு மீதான விசாரணையில், இந்த உத்தரவினை, தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மாடிஃபிகேஷன் வாகனத்திற்கும் ஜூகாத் (கலப்பின வாகனங்கள்) எனப்படும் ஹைபிரிட் வாகனங்களுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. மாடிஃபிகேஷன் என்பது, ஒரு பைக்கை அதன் உருவத்தில் வேறொரு தோற்றத்திற்கு கொண்டு வருவதாகவும். உதாரணமாக, ரெட்ரோ கிளாசிக் ரகத்திலான பைக்கை, கஃபே ரேசர் பைக்காக மாற்றுவது மாடிஃபிகேஷன் ஆகும்.

ஆனால், ஜூகாத் வாகனம் என்பது அவ்வாறானது அல்ல. பெரும்பாலும், ஜூகாத் ரக மாடிஃபிகேஷன், ரிக்ஷாக்கள் போன்ற வாகனங்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், மிதிவண்டி ரகத்தில் இருக்கும் ரிக்ஷாக்களில், பைக்கின் முன் பக்கம் அல்லது எஞ்ஜின் மட்டும் மாற்றிக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதுவே ஜூகாத் ரக வாகனங்கள் என அழைக்கப்படுகின்றன.
இதுகுறித்த உதாரணமான படத்தை நீங்கள் கீழே காணலாம்...

இத்தகைய வாகனங்கள் முறையான ஆர்டிஓ பதிவைப் பெறுவதில்லை என கூறப்படுகின்றது. அதேபோன்று, காப்பீடு மற்றும் உரிய ஓட்டுநர் உள்ளிட்டவை இல்லாமலே இந்த வாகனங்கள் இயக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இதன்காரணமாகவே, டெல்லி உயர்நீதிமன்றம், ஜூகாத் வாகனங்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி அம்மாநில போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஜூகாத் வாகனம்குறித்து டெல்லியைச் சேர்ந்த சிவ்குமார் என்பவர் அளித்த பொதுநல மனுவினை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த மனுவில், "ஜூகாத் வாகனங்கள் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டாலும், அவற்றை ஒழுங்குபடுத்த எந்த வழிகாட்டுதல்களும் இல்லை. ஆகையால், இ-ரிக்ஷா விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டதைப்போன்ற நடவடிக்கையே இதிலும் மேற்கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கில், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஃபர்மன் அலி மாக்ரே, "கடந்த 2013ம் ஆண்டு மே மாதம், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, அப்போதிலிருந்து ஜூகாத் வாகனங்கள் இயங்குவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் தடை கொண்டுவரப்பட்டது. இதுகுறித்த, அறிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஏற்கனவே அனுப்பி வைத்துவிட்டது" என தெரிவித்தார்.

இந்த மனுவை அளித்த சிவ்குமார், சமீபத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, ஒரு ஜூகாத் ரக வாகனத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து, இம்மனுவினை அளித்ததாகக் கூறப்படுகின்றது.

அவர் பார்த்த அந்த ஜூகாத் வாகனம், மோட்டார் சைக்கிளின் டயரை பயன்படுத்தியிருந்தது. அதேபோன்று, அதன் ஹேண்டில் மற்றும் எஞ்ஜின் பஜாஜ் நிறுவனத்தின் ஸ்கூட்டருடையதாக இருந்துள்ளது. இத்துடன், அதன் பின் பகுதி சரக்கை ஏற்றிச் செல்லும் ரிக்ஷாவின் உடற்கூறைப் பெற்றிருந்தது. ஒட்டுமொத்தத்தில் அந்த வாகனம் கலப்பினத்தின் மறு உருவமாக காட்சியளித்தது என அவர் விவரித்தார்.


Click it and Unblock the Notifications








