Just In
- 52 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சத்தமே இல்லாமல் தரமான சம்பவம்... இந்தியாவையே பிரம்மிக்க வைத்த மஹிந்திரா... என்னவென்று தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சோகம் அப்பியிருந்த இந்திய ஆட்டோமொபைல் துறையின் முகத்தில் தற்போது சிறிய மகிழ்ச்சியை நம்மால் காண முடிகிறது. ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் வாகனங்களின் விற்பனை சரிவு, வாகனங்களின் உற்பத்தி குறைப்பு மற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது போன்ற செய்திகளையே தினசரி கேட்டு கொண்டிருந்த மக்கள் தற்போது சற்று வித்தியாசமான செய்திகளை கேட்க தொடங்கியுள்ளனர்.
ஆம், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் வரலாறு காணாத சாதனை எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளன. தீபாவளி பண்டிகை காலமே இதற்கு முக்கிய காரணம். இதனால் கார் நிறுவனங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளன.
தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பு வரை இந்திய ஆட்டோமொபைல் துறையில் கடுமையான மந்தநிலை நிலவி வந்தது. வாகனங்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்ததால், கார் நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை குறைத்து கொண்டன. பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கின.
ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு, முன்னணி நிறுவனங்கள் பிரம்மிக்க வைக்கும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்துள்ளன. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் தந்திராஸ் தினத்தில் 45 ஆயிரம் கார்களை டெலிவரி செய்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இவ்வளவு அதிக கார்களை டெலிவரி செய்ததில் மாருதி சுஸுகி புதிய சாதனையை படைத்துள்ளது.
அதே சமயம் மாருதி சுஸுகியின் போட்டி நிறுவனமான ஹூண்டாய் தந்திராஸ் தினத்தில் 12,500 கார்களை டெலிவரி செய்துள்ளது. சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் தந்திராஸ் தினத்தில் 600 கார்களை டெலிவரி செய்துள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கு புது வரவான கியா மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்களும் தந்திராஸ் டெலிவரியில் அசத்தியுள்ளன.
இதன்படி தந்திராஸ் நாளில் கியா நிறுவனம் 2,138 செல்டோஸ் கார்களையும், எம்ஜி நிறுவனம் 700 ஹெக்டர் கார்களையும் டெலிவரி செய்துள்ளன. கியா மற்றும் எம்ஜி ஆகிய 2 நிறுவனங்களும் முறையே செல்டோஸ் மற்றும் ஹெக்டர் ஆகிய கார்களை மட்டுமே தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனமும் நிரூபித்துள்ளது. தந்திராஸ் தினத்தில் மஹிந்திரா நிறுவனம் 13,500 வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. மாருதி சுஸுகியை போல், ஒரே நாளில் அதிக வாகனங்களை டெலிவரி செய்ததில் மஹிந்திரா நிறுவனமும் சாதனை படைத்துள்ளது.
கடந்தாண்டு தந்திராஸ் தினத்தை காட்டிலும் நடப்பாண்டு தந்திராஸ் தினத்தில் மஹிந்திரா நிறுவனம் அதிக வாகனங்களை டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் ஒன்றும் உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பிறகு இந்தியாவின் 2வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் தந்திராஸ் தினத்தில் 12,500 கார்களை மட்டுமே டெலிவரி செய்துள்ளது.
ஆனால் மஹிந்திரா அதை விட அதிகமான வாகனங்களை தந்திராஸ் நாளில் டெலிவரி செய்துள்ளது. ஒரு வேளை மஹிந்திரா நிறுவனம் கமர்ஷியல் வாகனங்களையும் டெலிவரி டேட்டாவில் சேர்த்திருக்கலாம். அதுவே இதற்கு காரணமாகவும் இருக்கலாம். இதுதவிர மற்றொரு ஆச்சரியமான விஷயமும் இதில் அடங்கியுள்ளது.
அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கையும், தந்திராஸ் நாளில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளன. மஹிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 13,963 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்