Just In
- 19 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 59 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?
பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் செயல்படும் டிஎஸ் கார் நிறுவனத்தின் எஸ்யூவி மாடல் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் கார் வர்த்தகத்தை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் பீஜோ, சிட்ரோன், டிஎஸ், ஒபெல் மற்றும் வாக்ஸ்ஹால் உள்ளிட்ட கார் பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சிட்ரோன் பிராண்டு கார்களை இந்தியாவில் களமிறக்க பிஎஸ்ஏ குழுமம் முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சிட்ரோன் பிராண்டின் முதல் கார் மாடலான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை வெளியிட்டது. அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தது.
இந்த சூழலில், பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் செயல்படும் டிஎஸ் கார் பிராண்டின் டிஎஸ்-7 க்ராஸ்பேக் எஸ்யூவி ரக கார் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்நதுள்ளது. இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளத்தில் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.
அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் பீஜோ 3008 மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த டிஎஸ்-7 எஸ்யூவி மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், டிஎஸ்-7 எஸ்யூவி விலை உயர்ந்த பிரிமீயம் ரகத்தில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விலை அதிகம் நிர்ணயிக்க வேண்டி இருக்கும்.
எனினும், மூன்று பிராண்டுகளில் விற்பனைக்கு வர இருக்கும் எஸ்யூவிகள் ஒரே கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருப்பதால், முக்கிய பாகங்களை பங்கிட்டுக் கொள்ள இயலும். எனவே, டிஎஸ்-7 மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான சாதக, பாதகங்கள் குறித்து பிஎஸ்ஏ குழுமம் பரிசீலித்து சோதனை ஓட்டம் நடத்துவதாக கருதப்படுகிறது.
மானேசர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐசிஏடி என்ற நிறுவனம்தான் டிஎஸ்-7 க்ராஸ்பேக் எஸ்யூவியை இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்து வருவதாகவும் தெரிகிறது.
இந்த டிஎஸ்-7 எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று, 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்படலாம்.
டிஎஸ்-7 எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்படும் நிலையில், அதன் இந்திய அறிமுகம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. எனினும், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த எஸ்யூவியையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பிஎஸ்ஏ குழுமம் ஈடுபடும் என்று தெரிகிறது.