தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவலுக்கு மாறவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான பேருந்துகளை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு நேற்று (நவம்பர் 22) அறிவித்துள்ளது. 10 ஆயிரம் பிஎஸ்-6 பேருந்துகள் மற்றும் 2 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்யவுள்ளதாக பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

இதன்படி முதற்கட்டமாக 1,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,213 பிஎஸ்-6 பேருந்துகள் மற்றும் 500 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் தமிழக அரசு முடிவு செய்தது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், தமிழக அரசு மற்றும் ஜெர்மனியை அடிப்படையாக கொண்டு இயங்கும் KfW வங்கிகளுக்கு இடையே, இதற்கான திட்ட ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்தானது.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

இந்த ஒப்பந்தப்படி, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையிலான 2,213 பேருந்துகள் மற்றும் 500 எலெக்ட்ரிக் பஸ்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழக பேருந்து பயணிகள் மத்தியில் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

முதன்மை செயலாளர் சந்திர மோகன் தலைமையில், போக்குவரத்து துறையின் போர்டு மீட்டிங் நேற்று நடந்தது. அப்போது 2,213 பிஎஸ்-6 பஸ்கள் மற்றும் 500 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக முதன்மை செயலாளர் சந்திர மோகன் கூறினார். இந்தியா முழுவதும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானவையாக உள்ளன. ஆனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

இதனிடையே இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், போக்குவரத்து துறைக்காக சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை என்ன?, போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள், அவற்றின் செலவினங்களை கட்டுப்படுத்துவது மற்றும் பழைய பஸ்களை வெளியேற்றுவது ஆகியவை முக்கியமானவை.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில், 1,442 கோடி ரூபாய் மதிப்பில் 4,802 பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளதாகவும் இந்த கூட்டத்தின்போது முதன்மை செயலாளர் சந்திர மோகன் கூறினார். மேலும் பயணிகள் விரும்பக்கூடிய மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் உள்ள பஸ்களை முறையாக பராமரித்து வருவாயை பெருக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் முன்பு ஓட்டை, உடைசலான பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஏராளமான பஸ்களை தமிழக அரசு தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

இந்த சூழலில் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையான மற்றும் எலெக்ட்ரிக் பஸ்களையும் அதிகளவில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவது பயணிகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. இது தொடர்பான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன.. டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன. இது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன.. டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு

தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு தற்போது ஓரளவிற்கு பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. ஆம், தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன.. டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு

உண்மைதான். கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,216. இது கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.4 சதவீதம் குறைவு. ஆனால் கடந்த மூன்று ஆண்டு கால அளவில், பஸ்களின் விண்டுஷீல்டில், அதாவது கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களால் நடைபெறும் விபத்துக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன.. டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு

பெருநகர போக்குவரத்து கழகம் எனப்படும் எம்டிசியால் (MTC - Metropolitan Transport Corporation) சென்னையில் இயக்கப்பட்டு வரும் பஸ்கள் கடந்த ஆண்டு 1,066 சாலை விபத்துக்களில் சிக்கியுள்ளன. இந்த விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் பாதசாரி. இதில் 69 சதவீதம் பேர் பஸ்ஸின் முன் பகுதி மோதியதால் உயிரிழந்துள்ளனர்.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன

பஸ்களின் டிரைவர்களுக்கு பின் பகுதியை காட்டிலும் முன் பகுதியில்தான் அதிக பிளைண்ட் ஸ்பாட் (Blind Spot) உள்ளது என்பதை இவை நிரூபணம் செய்கின்றன. டிரைவர்களின் கண்களுக்கு புலப்படாத பகுதியே பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகிறது. சென்னை புரசைவாக்கம் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற மற்றொரு சாலை விபத்து இதை மேலும் உறுதி செய்தது.

தமிழக பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் மீது எம்டிசி பஸ்ஸின் முன்பகுதி மோதியது. இந்த விபத்து கடந்த வாரம் நடைபெற்றிருந்தது. பஸ்ஸின் முன் பகுதியில் மூதாட்டி ஒருவர் இருப்பதை டிரைவரால் பார்க்க முடியவில்லை. இதுவே விபத்துக்கு காரணம். தற்போது இந்த பிரச்னைக்கு அதிரடியாக முடிவு கட்டப்பட்டுள்ளது.

தமிழக பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன

ஆம், இனி தமிழக அரசு பஸ்களின் விண்டுஷீல்டில், வாழ்க வளமுடன், முருகன் துணை, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பொதிகை தென்றல் என்பது போன்ற ஸ்டிக்கர்களை பார்க்க முடியாது. அரசு பஸ்களின் கண்ணாடியில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு போக்குவரத்து துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.

தமிழக பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன

டிரைவர்களின் பார்க்க கூடிய நிலையை (Visibility) இந்த ஸ்டிக்கர்கள் குறைத்து விடுகின்றன. இதன் காரணமாகதான் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். ஆனால் இனி அவர்களால் இதனை செய்ய முடியாது.

தமிழக பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து டெப்போக்களும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெக்னிக்கல் சூப்பர்வைசர்களுக்கும் இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அனைத்து போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கும் ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டு விட்டது.

தமிழக பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன

பஸ் ஸ்டாப்களில் காத்து கொண்டிருக்கும் பயணிகள் இதை பார்த்துவிட்டு பேருந்தில் ஏறிக்கொள்ள முடியும்'' என்றனர். இந்த நடவடிக்கை மூலமாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தால், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிதான். இதனிடையே எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Efforts On To Introduce BS-6 Buses: Tamil Nadu Transport Department Principal Secretary. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X