Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 11 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Sports சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி அள்ளி வீசுவது இதற்குதான்
வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி காட்டியுள்ளார். அவர் சொன்னதை நிறைவேற்றுவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக, கடந்த 2016-17ம் நிதியாண்டில், 4.70 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டது. இதன்பின் வந்த 2017-18ம் நிதியாண்டில், இது 5.65 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
அதாவது சுமார் 25 சதவீதம் அதிகம். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவதால், பொருளாதார பாதிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க தேவையான நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக திகழும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்கலாம்.
தற்போது உலக நாடுகள் பலவும் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள் உலகை ஆட்சி செய்யப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்கால போக்குவரத்து சக்தி என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
எனவே இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஃபேம் இந்தியா (FAME- Faster Adoption And Manufacturing of (Hybrid &) Electric Vehicles India) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி கடந்த 2015-2017 வரையிலான முதற்கட்ட ஃபேம் இந்தியா (FAME I) திட்டத்திற்காக, 795 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
பல முறை நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்த முதற்கட்ட ஃபேம் இந்தியா திட்டம் வரும் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா (FAME II) திட்டம் குறித்த அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளவர்களும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த சூழலில், இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்கு, ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் 3,300 கோடி ரூபாய் என மூன்று ஆண்டுகளுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதற்கு மத்திய அமைச்சரவை மூலம் இன்று (பிப்ரவரி 28) ஒப்புதல் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. முதற்கட்ட திட்டத்துடன் ஒப்பிடுகையில் இது பல மடங்கு அதிகம் என்பதால், மத்திய அரசின் முடிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆதரவு அளிக்கும் இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் தொடர்பாக, உயர் அதிகாரிகள் மட்டத்தில், தொலை நோக்கு பார்வையுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சிறிய பேட்டரியில் நீண்ட தொலைவு பயணிக்கும் வாகனங்களுக்கு அதிக மானியம் கிடைக்கலாம் என தெரிகிறது.
உதாரணத்திற்கு பெரிய பேட்டரி பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனம் ஒன்று ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் பயணிக்கிறது என வைத்து கொள்வோம். அதே சமயம் சிறிய பேட்டரி பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனமும் அதே தொலைவு பயணித்தால், இதற்குதான் அதிக மானியம் கிடைக்கும்.
எனவே சிறிய பேட்டரியில் நீண்ட தொலைவு பயணிக்கும் வகையிலான எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க, உற்பத்தியாளர்களுக்கு இடையே போட்டி ஏற்படும். இதன் காரணமாகதான் இந்த முடிவு எடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில் இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2023ம் ஆண்டிற்குள், பதிவு செய்யப்படும் மொத்த வாகனங்களில், 50% வாகனங்கள் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களாகவும், 25% வாகனங்கள் எலெக்ட்ரிக் டூவீலர்களாகவும், 10% வாகனங்கள் எலெக்ட்ரிக் பயணிகள் வாகனங்களாகவும் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இங்கு தற்போது மருந்துக்கு ஒன்றிரண்டு எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் சாலையில் உலா வருகின்றன.
இன்னும் சொல்லப்போனால், பெரு நகரங்களை தவிர்த்து விட்டு பார்த்தால், சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை காண்பது அரிதாகவும் உள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இந்தியாவின் தற்போதைய தேவை.
எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இத்தகைய திட்டங்கள் அவசியமான ஒன்றுதான். இது தவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் பிரபலம் அடையாமல் இருப்பதற்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணம். எனவே ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தொலைவிற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் புது டெல்லியில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம் என மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?