Just In
- 4 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
காற்று மாசுபாடு பிரச்னை... 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் வாகனங்களுக்கு வருகிறது அதிரடி தடை?
15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை விஸ்வரூபமெடுத்து வருகிறது. தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக டீசல் வாகனங்களால்தான் காற்று அதிகம் மாசடைந்து கொண்டுள்ளது. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் விதமாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இதில் ஒன்றாகும்.
மத்திய அரசு தவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சூழலில் சுற்றுச்சூழல் பிரச்னையை கருத்தில் கொண்டு, 15 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும்படி பீகார் மாநில அரசுக்கு, பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Bihar State Pollution Control Board - BSPCB) வலியுறுத்தியுள்ளது.
பாட்னா, கயா, முசாபர்பூர் ஆகிய மூன்று நகரங்களில், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறையின் முதன்மை செயலாளருக்கு, அறிக்கை ஒன்றினை பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பி வைத்துள்ளது.
இதில், குளிர்காலத்தின்போது காற்று மாசுபாடு பிரச்னை அதிகரிக்கலாம் என்ற தனது கவலையை பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எனவே பிரச்னையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கண்ட மூன்று நகரங்களிலும் காற்று அதிகம் மாசுபட்ட நிலையில் உள்ளது.
எனவே அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கு அதிரடியாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர தனியார் வாகனங்களில், சிஎன்ஜி எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கையை வரையறுக்கும்படி போக்குவரத்து துறையையும் பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டு கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியிலான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் அதிகப்படியான தொகை பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே உலகின் பெரும்பாலான நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளன. இந்தியாவும் வரும் காலங்களில் முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!