Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...
பிரதமர் மோடியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கிய எரிபொருட்களின் விலை அவ்வப்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்து, வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தி வருகிறது. தற்போது கூட அமெரிக்கா-ஈரான் இடையேயான பிரச்னை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழ்நிலையிலும், இந்தியாவில் இன்னும் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
எனவே தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், வாகன ஓட்டிகளில் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. சரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வே இல்லையா? என நீங்கள் கேட்கலாம்.
நிச்சயமாக இதற்கு மாற்று இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு முடிவு கட்டலாம். எனவே மத்திய அரசும் கூட இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை பல்வேறு வழிகளில் ஊக்குவித்து வருகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாயில் கணிசமான தொகை மிச்சம் பிடிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும், சுற்றுச்சூழல் மேம்படும் உள்ளிட்ட காரணங்களாலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
இந்திய சாலைகளில் இயங்கும் மொத்த வாகனங்களில், குறைந்தபட்சம் 25 சதவீத வாகனங்களாவது, வரும் 2030ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா II திட்டத்திற்காக சமீபத்தில் மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது எளிதாகும்.
அத்துடன் நாடு முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இஇஎஸ்எல் (EESL - Energy Efficiency Services Limited) பொறுப்பேற்று கொண்டுள்ளது.
முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜர்கள் (Fast Chargers) நிறுவப்படவுள்ளன. இதன்பின் எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தப்படும் அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களிலும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன.
இதுதவிர பொது பார்க்கிங் இடங்களிலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வேகமாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக்குவது பிரதமர் மோடியின் கனவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என விரும்புவதாக அவர் சமீபத்தில் கூறினார்.
இந்த சூழலில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் 7 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை இஇஎஸ்எல் தற்போது இன்ஸ்டால் செய்துள்ளது. 4 ஸ்லோ மற்றும் 3 ஃபாஸ்ட் சார்ஜர்கள் என மொத்தம் 7 சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டுள்ளன.
|
பாராளுமன்ற மக்களவையின் செயலாளர் சினேஹ்லதா ஸ்ரீவத்சவா (Snehlata Shrivastava) இதனை திறந்து வைத்தார். அத்துடன் 10 புதிய எலெக்ட்ரிக் கார்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவை டாடா டிகோர் எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா இ-வெரிட்டோ கார்கள் ஆகும்.
இஇஎஸ்எல் டெண்டரின் ஒரு பகுதியாக இந்த கார்கள் சமீபத்தில்தான் அரசுக்கு சப்ளை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இஇஎஸ்எல் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதேபோல் நாடு முழுக்க சார்ஜிங் ஸ்டேஷன்களை வேகமாக நிறுவினால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் ஒதுக்குகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!