Just In
- 24 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 41 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா?
அசாம் மாநிலத்தின் முதல் மஸ்டாங் என அழைக்கப்பட்ட கார், கோர விபத்தைச் சந்தித்துள்ளது. இந்த விபத்துகுறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தற்போது மழைக் காலம் ஆரம்பித்துள்ளது. இதுபோன்ற, காலத்தில் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியான பயண அனுபவத்தை வழங்கினால், சற்று கவனத்துடன் செல்ல வேண்டியது அவசியமாக இருக்கின்றது. ஏனென்றால், மழைக் கால பயணமானது, சற்று கவனம் சிதறினாலும், மிகப் பெரிய பின்விளைவுகளில் நம்மை சிக்க வைத்துவிடும்.
இந்நிலையில், இத்தகைய ஆபத்தான சூழலில்தான் ஃபோர்டு நிறுவனத்தின் விலையுயர்ந்த மஸ்டாங் கார் ஒன்று சிக்கியுள்ளது. இந்த கார், ஆன் ரோடில், ரூ. 80 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றது.
தற்போது, விபத்தில் சிக்கியிருக்கும் மஸ்டாங் கார்தான், அசாம் மாநிலத்தின் முதல் மஸ்டாங் என கூறப்படுகின்றது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. அதேசமயம், அசாம் மாநிலத்தில் ஃபோர்டு மஸ்டாங் காருக்கான டீலர்ஷிப் இன்னும் தொடங்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. இதன்காரணமாகவே, விபத்தில் சிக்கியிருக்கும் மஸ்டாங் அம்மாநிலத்தின் முதல் மாடல் என கூறப்படுகின்றது.
இந்த மஸ்டாங் காரை அதன் உரிமையாளர் உத்தரபிரேதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கவுதம் புத் ஃபோர்டு டீலர் மூலம் வாங்கியுள்ளார். இன்னும் பதிவெண் பெறப்படாதநிலையில், அந்த காரை அதன் உரிமையாளர், தற்காலிக பதிவெண் கொண்டு இயக்கி வந்துள்ளார்.
இந்த கார் சில நாட்களுக்கு முன்பு வாங்கியதை உறுதி செய்யும் வகையில், ஃபோர்டு மஸ்டாங் கார்குறித்த குறித்த வீடியோவை கவுஹாத்தி டைம்ஸ் என்ற ஆங்கில செய்தி தளம் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கார் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, இந்த கார் ஷில்லாங் செல்லும் வழியான அசாம் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் விபத்தைச் சந்தித்துள்ளது.
இந்த விபத்தானது, மழை பொழிவின்போது ஏற்பட்ட மண் சரிவின்மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான தீங்கும் நேரவில்லை என கூறப்படுகின்றது.
கார் விபத்திற்குள்ளான புகைப்படத்தை தி ஷில்லாங் கேங் என்ற பேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த கார் விபத்தில் சிக்க மற்றுமொரு காரணமும் கூறப்படுகின்றது. அந்தவகையில், கவுகாத்தி உள்ள சில சமூக விரோதிகள் பணத்திற்காக, சாலையில் எண்ணெய்யை ஊற்றிவிடுவதாகவும், அந்த எண்ணெய்யால் விபத்தைச் சந்திக்கும் கார்களை மீட்டு கொடுக்க ரூ. 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாக தகவல் தெரிவிக்கின்றன.
பொதுவாக, மழைக் காலத்தில் வாகனங்களை சாலையில் இயக்குவது என்பது மிகவும் சவாலான ஒன்று. அதிலும், அசாம், கவுஹாத்தி போன்ற மலைப் பகுதிகளில் பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இங்கு மழை மற்றும் குளிர் காலங்களில் எதிர்புறத்தில் வரும் வாகனங்களை மறைக்கின்ற அளவிற்கு மூடு பனியும், மழையின் வேகமும் இருக்கும்.
இத்தகைய சூழலில் சமூக விரோதிகள் சிலரின் இந்த ஆபத்தான செயலால், அது மேலும் ஆபத்து நிறைந்ததாக மாறிவிடுகின்றது.
தற்போது, விபத்தில் சிக்கிய ஃபோர்டு மஸ்டாங் கார், இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Image Courtesy: CGTN
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?