Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவில் மஹிந்திராவுடன் இணையும் ஃபோர்டு கார் நிறுவனம்!
இந்தியாவில் கார் வர்த்தகத்தை மஹிந்திராவுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் கடந்த 1995ம் ஆண்டு இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்கியது. ஃபோர்டு கார் குழுமத்தின் கீழ் தனி நிறுவனமாக இந்தியாவில் கார் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
சென்னையிலும், குஜராத் மாநிலத்திலும் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. உள்நாட்டு தேவை மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் இங்கு உற்பத்தியாகும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் மிக நீண்ட காலமாக கார் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும், எதிர்பார்த்த அளவு வர்த்தகம் சிறப்பாக இல்லை. வெறும் 3 சதவீத சந்தை பங்களிப்பை மட்டுமே ஃபோர்டு தக்க வைத்து வருகிறது.
இதையடுத்து, இந்தியாவில் நேரடி வர்த்தகத்தை கைவிட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனமாக இந்திய வர்த்தகத்தை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் புதிய நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
மஹிந்திரா போர்டு என்ற பெயரில் புதிய நிறுவனம் செயல்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கூட்டு நிறுவனத்தில் ஃபோர்டு நிறுவனம் 49 சதவீத பங்குகளையும், மஹிந்திரா 51 சதவீத பங்குகளையும் கைவசப்படுத்த உள்ளன. இந்த கூட்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் வாரியத்தில் ஓட்டளிக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு நேரடி உரிமைகளை ஃபோர்டு கைவசம் வைத்திருக்கும் என்று தெரிகிறது.
இந்தியாவில் உள்ள இரண்டு கார் ஆலைகள் உள்ளிட்ட ஃபோர்டு நிறுவனத்தின் சொத்துக்கள் மஹிந்திரா ஃபோர்டு கூட்டு நிறுவனம் வசம் செல்ல இருக்கிறது. எனினும், எஞ்சின் உற்பத்தி ஆலை உள்ளிட்ட சில சொத்துக்களை தன் கையில் நேரடியாக வைத்துக் கொள்ள ஃபோர்டு முடிவு செய்துள்ளது.
புதிய கார்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எஞ்சின் உருவாக்கப் பணிகளுக்காக கடந்த 2017ம் ஆண்டு மஹிந்திராவுடன் ஃபோர்டு நிறுவனம் கூட்டணி அமைத்தது. இதன்மூலமாக, இரு நிறுவனங்களும் பலன் பெறும் என்ற நிலை உருவானது. முதலீடுகளை குறைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் நேரடி வர்த்கத்திலிருந்து ஃபோர்டு விலக முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை கைவிட்டது. செவர்லே பிராண்டில் கார் விற்பனை மற்றும் உற்பத்தியை முற்றிலுமாக கைவிட்டுவிட்டு டாடா காட்டியது. இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனமும் நேரடி வர்த்தகத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Bloomberg
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!