Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அடுத்த மாதம் முதல் இந்த டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...
அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக பயணிக்க புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் முக்கியமானது. விரைவான போக்குவரத்திற்கு உதவி செய்யும் தரமான சாலை வசதிகளை கொண்டிருக்கும் நாடுகளால் மட்டுமே, பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ச்சியடைய முடியும்.
இதனை மனதில் வைத்துதான் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது ஆட்சி செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் கூட தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின் தேசிய நெடுஞ்சாலை பணிகள் வேகம் எடுத்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் கிடப்பில் கிடந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி முடுக்கி விட்டுள்ளார்.
இது அவசியமான நடவடிக்கைதான் என்ற போதிலும், தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டி வீசப்படுவதாகவும், கனிம வளங்கள் சூறையாடப்படுவதாகவும் புகார்கள் உள்ளன. சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு கிளம்பிய எதிர்ப்பு இதற்கு ஓர் உதாரணம்.
எனவே பெரும்பாலானோர் மத்தியில் தேசிய நெடுஞ்சாலைகள் மீது அதிருப்தியே நிலவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பலர் வெறுக்க மற்றொரு முக்கியமான காரணம் டோல்கேட்கள். இந்தியா முழுவதும் தற்போது 500க்கும் மேற்பட்ட டோல்கேட்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், 40க்கும் மேற்பட்ட டோல்கேட்கள் தமிழகத்தில் இயங்கி கொண்டுள்ளன. டோல்கேட்களை வாகன ஓட்டிகள் வெறுக்க, அங்கு அரங்கேற்றப்பட்டு வரும் விதிமுறை மீறல்களே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
2 சுங்கச்சாவடிகளுக்கு இடைப்பட்ட தொலைவு குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டர்களாக இருப்பது அவசியம். ஆனால் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து டோல்கேட்கள் அமைக்கப்பட்டு, கட்டண கொள்ளை அரங்கேற்றப்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் புகார்களை அடுக்குகின்றனர்.
அத்துடன் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரிக்கும் பட்சத்தில், அங்கு கட்டணம் குறைக்கப்பட வேண்டியதும் அவசியமாக உள்ளது. ஆனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், கட்டணமும் உயர்த்தப்பட்டு கொண்டேதான் இருக்கிறது.
இதுதவிர எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கட்டண கொள்ளை நடைபெறுவதாகவும் வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர். சுங்கச்சாவடிகளை இன்னும் பலர் வெறுக்க மற்றொரு முக்கியமான காரணம் காத்திருக்கும் நேரம்தான்.
சில சமயங்களில் வாகன ஓட்டிகள் டோல்கேட்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. குறிப்பாக வார விடுமுறை அல்லது நீண்ட விடுமுறை தொடங்கும் நாட்கள் மற்றும் முடியும் நாட்களில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் டோல்கேட்களை ஒரு சேர முற்றுகையிடுகின்றன.
எனவே கட்டணம் செலுத்தி விட்டு செல்வதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவும் நீண்ட தொலைவு பயணிப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு டோல்கேட்டிலும் நீண்ட நேரம் நின்று நின்று செல்ல வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ததன் மூலமாக மிச்சம் பிடிக்கப்பட்ட நேரத்தை, டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்கும்போது இழந்து விடக்கூடிய சூழல்தான் உள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் டோல்கேட்களை பலரும் வெறுக்கின்றனர்.
எனவே டோல்கேட்களை மூட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்க மறுக்கிறது. இதன் காரணமாக டோல்கேட்களை முற்றுகையிட்டு அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சில சமயங்களில் டோல்கேட்கள் அடித்தும் நொறுக்கப்படுகின்றன. எனவே இத்தகைய தாக்குதல்களில் இருந்து காக்கும் விதமாக, டோல்கேட்களை நகர்ப்புறங்களில் இருந்து தள்ளி அமைக்க ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆனால் டோல்கேட்களை மூடும் எண்ணம் உள்ளதா? என்பது தெரியவில்லை.
இதனிடையே ஏற்கனவே குறிப்பிட்டபடி வாகன ஓட்டிகள் டோல்கேட்களை வெறுக்க காத்திருக்கும் நேரம் அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட தற்போது ஓர் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
158 கிலோ மீட்டர் நீளமுள்ள ஓஆர்ஆர் எனப்படும் ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோடு (Outer Ring Road-ORR) டோல்கேட்களில்தான் இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. அதாவது 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்று கொண்டிருந்தால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
ஓஆர்ஆர் சாலையின் எந்தவொரு டோல்கேட்டின் எந்தவொரு லேனிலும் (Lane) இருபதுக்கும் அதிகமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தால், இலவசமாகவே பயணிக்கலாம். டோல் கலெக்ட்டிங் ஏஜென்சி, கட்டணம் வசூலிக்காமலேயே அனைத்து வாகனங்களையும் க்ளியர் செய்து விடும்.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களிலும் குறைந்தபட்சம் இதுபோன்ற நடவடிக்கைகளையாவது எடுக்க வேண்டும் என்பதே அனைத்து வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட்ட ஓர் நல்ல நடவடிக்கை இது. அதே சமயம் ஒவ்வொரு லேன்களிலும் நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை, டோல்கேட் ஊழியர்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியதிருக்கும்.
ஏனெனில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில், தங்கள் லேனில் நின்று கொண்டிருக்கும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பாக பயணிகள் முறையிடக்கூடும். இது தொடர்பாக பயணிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.