Just In
- 8 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 12 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம்... பிரபல கார் பந்தய வீரர் கவுரவ் கில் மீது வழக்குப் பதிவு!
ராஜஸ்தானில், பைக் மீது பந்தய கார் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில், பிரபல கார் பந்தய வீரர் கவுரல் கில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ராஜஸ்தானில், தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்று கடந்த வார இறுதியில் நடந்தது. அப்போது, பந்தயம் நடந்த தடத்திற்குள் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பைக்கில் கடந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக பிரபல கார் பந்தய வீரர் கவுரவ் கில் ஓட்டி வந்த பந்தய கார் அந்த தடத்தில் வந்த பைக்கின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில், பைக்கை ஓட்டி வந்த நரேந்திராவும், அவரது பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி மற்றும் மகன் படுகாயமடைந்து உயிரிழந்தனர். கவுரவ் கில் மற்றும் அவருக்கு துணையாக காரில் வழிகாட்டுபவராக செயல்பட்டவரும் சிறிய காயங்களுடன் தப்பினர்.
இந்த பயங்கர சம்பவம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த கவுரவ் கில் மற்றும் அவருக்கு வழி காட்டியாக செயல்பட்டவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. உள்நோக்கம் இல்லையென்றாலும், மரணத்தை விளைவித்த குற்றத்தின் கீழ் அவரது பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டியை ஏற்பாடு செய்திருந்த மேக்ஸ்எக்ஸ்பீரியன்ஸ், மஹிந்திரா, ஜேகே டயர்ஸ், எம்ஆர்எஃப் டயர்ஸ் மற்றும் தேசிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆரம்ப கட்ட விசாரணையில், அனுமதி பெறாமல், எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் போட்டியை நடத்தி இருப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த நரேந்திராவின் மூத்த மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவின்பேரில், மாவட்ட கலெக்டர் ஹிமான்சு குப்தா மற்றும் போலீஸ் கமிஷனர் சிவ்ராஜ் மீனா ஆகியோரை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்க முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!