Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?
வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக அசத்தலான அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. கார், டூவீலர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி, ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் ஏற்படுத்திய தாக்கம், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள், போக்குவரத்து நெரிசல் ஆகியவை இதில் மிகவும் முக்கியமானவை.
இருந்தபோதும் வாகன விற்பனையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசுகளும் இதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் கோவா மாநில அரசு தற்போது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக கோவா மாநில அரசு சாலை வரியை 50 சதவீதம் குறைக்கவுள்ளது. சாலை வரியை 50 சதவீதம் குறைப்பது என்ற முடிவை கோவா மாநில அரசு நேற்று (செப்டம்பர் 30) எடுத்தது. வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அக்டோபர் முதல் மூன்று மாதங்களுக்கு சாலை வரியை 50 சதவீதம் குறைக்க கோவா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ கூறுகையில், ''வாகன விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தள்ளுபடி தொடர்பாக ஒவ்வொரு நாளும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதே பாணியில் கோவா மாநிலத்தில் வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக சாலை வரியை 50 சதவீதம் குறைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
தீபாவளி உள்பட பண்டிகை காலம் நெருங்குவதால், அரசின் முடிவு வாகன விற்பனையை அதிகரிக்க உதவும் எனவும் அமைச்சர் மவுவின் கோடின்ஹோ கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ''சாலை வரியை குறைப்பதற்கான கோப்புகள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு சாலை வரி குறைக்கப்படும்'' என்றார்.
கோவா மாநிலத்திலும் வாகன விற்பனை சமீப காலமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் விற்பனை சரிவடைய ஜிஎஸ்டியும் ஒரு காரணம்'' என்றார்.
கோவா மாநிலத்தில், பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையானது கடந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் 15 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டின் ஏப்ரல்-ஜூலை கால கட்டத்தில் 19,485 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2018ம் ஆண்டின் இதே கால கட்டத்தில் 22,480 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
கோவா அரசு தற்போதுதான் விழித்து கொண்டு வாகன விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பே, வாகன விற்பனையை அதிகரிக்க தேவையான அறிவிப்புகளை வெளியிட்டு விட்டது. அந்த அறிவிப்புகள் குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்டோமொபைல் துறையை சரிவிலிருந்து மீட்பதற்கான புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். அந்த திட்டங்கள் பின்வருமாறு:
வாகனக் கடன் வட்டி குறைப்பு
வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், கார் வாங்குவோரை கவர்ந்து இழுக்கும் வாய்ப்பை நிறுவனங்கள் பெற முடியும். மொத்தத்தில், இந்த புதிய அறிவிப்புகள் வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி