Just In
- 50 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோரிக்கையை ஏற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கோவா முதல்வர்.. புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்
வாகன விற்பனையகங்களின் உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று அதிரடி அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்திய வாகன சந்தை கடந்த 20 ஆண்டுகளில் காணாத அளவிலான விற்பனை வீழ்ச்சியை அண்மைக் காலங்களாகச் சந்தித்து வருகின்றது.
இந்த மந்த நிலையில் இருந்து தப்பிக்கும் விதமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்காலிக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தல், உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக இழுத்து மூடுதல் உள்ளிட்ட செயல்களில் அவை ஈடுபட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி, சில டீலர்கள் அவர்களின் ஷோரூமிற்கு மூடு விழாவை செய்து வருகின்றனர். இருப்பினும், விற்பனைக்கு சரிவிற்கு ஈடு கொடுக்க முடியாத சூழலே நிலவி வருகின்றது.
கடந்த காலங்களில் உலகின் மிகப் பெரிய வாகன சந்தையாக நிலவி வந்த இந்திய வாகன சந்தையின் இந்த நிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அதிகபட்ச ஜிஎஸ்டி வரி, எரிபொருள் வாகனங்களின் பதிவு கட்டணம் உயர்வு உள்ளிட்டவையே முக்கிய காரணியாக இருக்கின்றது.
ஆகையால், பாதாளத்தின் விளம்பில் உள்ள இந்திய வாகனத்துறையை மீட்க ஜிஎஸ்டி வரியை கணிசமாக குறைக்குமாறு மத்திய அரசிடம் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றுகூடி கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளன.
ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.
இந்நிலையில், வீழ்ச்சியடைந்துள்ள வாகன சந்தைக்கு சற்றே கை கொடுக்கும் விதமாக, யூனியன் பிரதேசமான கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பிரமோத் சாவந்த், அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வருகின்ற டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பதிவு செய்யப்படும் புதிய வாகனங்கள் அனைத்திற்கும், சாலை வரி பாதியளவு மட்டுமே வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பால், வாகனங்களின் பதிவிற்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 50 சதவீதம் குறைந்துள்ளது.
மாநில போக்குவரத்துத் துறை தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் வாகனங்களின் விற்பனை ஒட்டுமொத்தமாக 15-17 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிகின்றது. இது மேலும் அதிகரிக்கும் என அம்மாநில வாகன உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்தனர். இதையடுத்தே இந்த அதிரடி நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
தற்போது, கோவா அரசு ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்திற்கு வரியாக அந்த வாகன த்தின் விலையில் இருந்து 9 சதவீதத்தைப் பெறுகின்றது. அதேபோன்று, ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சம் வரையுள்ள இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதத்தையும், ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமான விலையுள்ள பைக்குகளுக்கு 15 சதவீதம் வரியையும் அது வசூலித்து வருகின்றது.
இதேபோல, ரூ. 6 லட்சம் வரையுள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு 9 சதவீதம் வரியும், பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனையாகும் வாகனங்களுக்கு 11 சதவீதம் வரியும் வசூலிக்கப்படுகின்றது. அதேசமயம், ரூ. 10-15 வரையுள்ள வாகனங்களுக்கு 11 சதவீதமாக வசூல் செய்யப்படுகின்றது. இதில், உச்சபட்சமாக 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனையாகும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 13 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
ஏற்கனவே, நாடு முழுவதும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு டீலர்ஷிப் நிறுவனங்கள் கணிசமான சலுகை திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கோவா அரசு கையாண்டு இருக்கும் இந்த நடவடிக்கை சற்று வாகன விற்பனைக்குக் கைகொடுக்கும் என நம்பப்படுகின்றது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!