Just In
- 1 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 45 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கான முடிவு எடுக்கும் அதிகாரம் தனது கையில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. குறிப்பாக, இதன் தாக்கத்தால் ஆட்டோமொபைல் துறை பெரும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வாகன விற்பனையை அதிகரிப்பதற்கான புதிய ஊக்குவிப்புத் திட்டங்களை கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.
இந்த ஊக்குவிப்புச் சலுகைகள் மற்றும் பிஎஸ்-4 வாகனப் பதிவு குறித்த விளக்கம் போன்றவை சற்று ஆறுதலை தந்துள்ளது. இருப்பினும், தற்போது வாகனத் துறை இருக்கும் கடினமான சூழலில், இந்த திட்டடங்கள் போதாது என்றே கருதப்படுகிறது.
மேலும், வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவதற்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. தற்போது வாகனங்கள் மீது விதிக்கப்படும் அதிகபட்சமான 28 சதவீத வரியை 18 சதவீதமாக குறைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஜிஎஸ்டி வரி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்," வாகன விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். மேலும், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலின் கையில்தான் உள்ளது. அது என் கையில் இல்லை.
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு யோசனை வழங்கி இருக்கிறோம். வரும் 20ந் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நடக்க இருக்கிறது. அதில், நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
இதனால், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால் இது நிச்சயம் வாகனத் துறையை ஊக்கப்படுத்தும் என்று கருதப்படுகிறது. பண்டிகை காலத்தில் இந்த அறிவிப்பு வந்தால், அது நிச்சயம் கார், பைக் உள்ளிட்ட வாகனத் துறைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.