Just In
- 37 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இந்திய மக்கள் காத்து கொண்டிருந்த அறிவிப்பு அதிரடியாக வெளியானது... மாஸ் காட்டிய மோடி அரசு!!
இந்திய மக்கள் காத்து கொண்டிருந்த அறிவிப்பு இன்று அதிரடியாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலுக்கு மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகிறது. சுற்றுச்சூழல் மட்டுமல்லாது இந்தியாவின் பொருளாதாரத்திலும் பெட்ரோல், டீசல் வாகனங்களால் சில பாதிப்புகள் உண்டாகி வருகின்றன. பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக ஒரு ஆண்டுக்கு இந்தியா பல லட்சம் கோடி ரூபாய்களை செலவிட்டு வருவதே இதற்கு காரணம்.
இந்த 2 பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம்.
அத்துடன் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இன்னும் பெரிய அளவில் கட்டமைக்கப்படவில்லை. இந்த இரண்டு காரணங்களாலும், பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் பிரச்னை நிலவி வருகிறது. இருந்தபோதும் இந்த இரண்டு பிரச்னைகளையும் நிவர்த்தி செய்து, பொதுமக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம் என்பதால், அவற்றை மக்கள் வாங்குவதை எளிதாக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ஃபேம் இந்தியா திட்டம் இது ஒரு உதாரணம். இதுதவிர சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் கூட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கினார்.
அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி தற்போதுள்ள 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக அறிவித்திருந்தார். கடந்த ஜூலை 25ம் தேதி (நேற்று முன் தினம்) நடைபெறுவதாக இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். ஏனெனில் இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேறு சில பணிகள் இருந்ததன் காரணமாக நேற்று முன் தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை.
இந்த சூழலில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (ஜூலை 27) காலை நடைபெற்றது. வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி கவுன்சில் அதிரடியாக குறைத்தது.
இது மட்டுமல்லாது எலெக்ட்ரிக் வாகன சார்ஜர்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து கொண்டே வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க லோன் பெறுபவர்களுக்கு வருமான வரியில் சலுகைகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு கூட சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது. இதுபோல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்கள் மீதான ஜிஎஸ்டி வரி இன்று அதிரடியாக குறைக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் நடவடிக்கைகளில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
எனவே வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இந்தியாவில் படிப்படியாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. அதே சமயம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான பற்றாக்குறையை களைவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கியமான இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் கட்டமைக்கப்படவுள்ளன.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வரும் சூழலில், நாட்டை படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் தேசமாக மாற்ற மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாகவே இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணமாக பார்க்கப்படுகிறது.
இது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைதான் என்றாலும், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில், இவ்வளவு பெரிய இலக்கை வரும் 2030ம் ஆண்டிற்குள் எட்டுவது கடினம் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் எப்படியாவது இந்த இலக்கை எட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தற்போது ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மட்டுமல்லாது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!