Just In
- 15 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 48 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Movies போடு வெடிய.. ராமராஜனின் சாமானியன் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியானது அறிவிப்பு
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹோண்டா எச்ஆர்வி இந்திய அறிமுக திட்டம் ரத்தானது... காரணம் இதுதான்!
ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
அனல் பறக்கும் இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் புத்தம் புதிய எச்ஆர்வி எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டது. மேலும், இந்திய சாலைகளில் வைத்து இந்த புதிய க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி கார் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. ஸ்பை படங்களும் வெளியாகி ஹோண்டா கார் பிரியர்களின் ஆவலைத் தூண்டி வந்தது.
பண்டிகை காலத்தில் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, அடுத்த மாதம் இந்தியாவில் இந்த புதிய கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது.
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஹோண்டா கார் ஆலையில் சோதனை முறையில் எச்ஆர்வி உற்பத்தி விரைவில் துவங்கப்பட இருந்தது. அத்துடன், சில எச்ஆர்வி கார்களும் உற்பத்தி இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டன. எனவே, அடுத்த மாதம் விற்பனைக்கு நாள் குறிப்பதுதான் பாக்கி என்ற நிலை இருந்தது.
மேலும், உதிரிபாக சப்ளையர்களுக்கும் ஆண்டுக்கு 12,000 கார்களை உற்பத்தி செய்வதற்கான இலக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால், இந்திய கார் சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாக, அதனை ஆண்டுக்கு 8,000 கார்கள் உற்பத்தி என்று இலக்கை குறைத்து சப்ளையர்களுக்கு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து, எச்ஆர்வி எஸ்யூவிக்கான உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக சப்ளையர்கள் புதிய உற்பத்திப் பிரிவுகளை அமைத்திருந்தனர். இதற்காக, அவர்கள் பெரும் முதலீட்டையும் செய்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்தை ஹோண்டா கார் நிறுவனம் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளதாக ஆட்டோகார் புரோஃபஷனல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவிக்கான உதிரிபாகங்களை 30 சதவீதத்திற்கு மேல் இந்தியாவில் பெறுவதற்கு ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், அந்த இலக்கை அடைவதில் கடும் சவால்கள் எழுந்துள்ளன.
இதனால், போட்டியாளர்களைவிட விலையை சவாலாக நிர்ணயிக்க முடியாது. எனவே, எச்ஆர்வியை அறிமுகம் செய்து சூடுபட்டுக் கொள்ள ஹோண்டா கார் நிறுவனம் விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே, இந்த திட்டத்தை கடைசி நேரத்தில் அதிரடியாக ரத்து செய்துவிட்டது.
எச்ஆர்வி எஸ்யூவியின் உதிரிபாகங்களுக்காக அதிக முதலீடு செய்துள்ள இந்திய சப்ளையர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக கார் எஞ்சின்களை மேம்படுத்தி அறிமுகம் செய்வதில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளது ஹோண்டா கார் நிறுவனம். மேலும், மின்சார கார்களை அறிமுகம் செய்வது குறித்தும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!