Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹூண்டாய், கியா மின்சார கார்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டம்?
ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் மின்சார கார்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. முதல் மாடலாக கோனா மின்சார எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, புதிய மின்சார கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. மறுபுறத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனமும் மின்சார கார்களை அறிமுகம் செய்யும் திட்டத்தை கையில் வைத்துள்ளது.
இந்த நிலையில், இந்த இரு பிராண்டுகளின் மின்சார கார்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கு ஹூண்டாய் குழுமம் முடிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. எல்ஜி நிறுவனத்திடமிருந்து பேட்டரியை சப்ளை பெறுவதற்கும், இதர பாகங்களை பிற அயல்நாட்டு நிறுவனங்களிடமிருந்து சப்ளை பெறுவதற்கான திட்டத்துடன் செயலாற்றி வருகிறது.
அதேபோன்று, இந்தியாவில் உள்ள உள்நாட்டு சப்ளையர்களிடமிருந்து உதிரிபாகங்களை சப்ளை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே, உள்நாட்டு சப்ளையர்களுடன் நெருக்கமான உறவு இருப்பதால், எதிர்காலத்தில் மின்சார கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கான திட்டம் கையில் எடுக்கப்படும் என்று ஹூண்டாய் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், பேட்டரி உள்ளிட்ட அனைத்து முக்கிய பாகங்களையும் இந்தியாவிலேயே சப்ளை பெறுவதற்கான திட்டமும் இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே மின்சார கார்களுக்கான பேட்டரி, மின் மோட்டார், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பாகங்களின் உற்பத்தி சாதாரணமாகிவிடும் என்பதுடன், விலையும் வெகுவாகக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2025ம் ஆண்டு வாக்கில் மின்சார கார்களின் வர்த்தக மதிப்பும் உயரும் வாய்ப்பு இருப்பதுடன், சந்தைப் போட்டியும், நுகர்வும் அதிகரிப்பதால் மின்சார கார்களின் விலை கணிசமாகா குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் கார் சந்தையில் மின்சார கார்களின் பங்களிப்பு என்பது 25 சதவீதம் அளவிற்கு உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு இருக்கிற. எனவே, அடுத்த ஆண்டு முதல் மின்சார கார்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!