Just In
- 1 hr ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 2 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 2 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
- 5 hrs ago இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
Don't Miss!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- News 17 தொகுதிகளில் 20% ஓட்டுகளை தாண்டும் பாஜக.. எந்தெந்த இடங்கள் தெரியுமா? தந்தி டிவி கருத்து கணிப்பு
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடியை முதலீடு செய்ய ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை மனதில் வைத்து, முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாலக கோனா எஸ்யூவியே நேற்றுமுன்தினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவி சிறப்பம்சங்களில் அசத்தலாக வந்தபோதிலும், ரூ.25.30 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று மலைப்பான விஷயமாக இருக்கிறது.
எனினும், சிறந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வந்திருப்பதால், பசுமை வாகனங்களை விரும்புவோர் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஹூண்டாய் இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் குறைவான பட்ஜெட்டில் சிறந்த எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை ஹூண்டாய் கையில் எடுத்துள்ளது.
அதன்படி, ரூ.1,400 கோடியை எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். இதில், கார் உருவாக்கப் பணிகள் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி ஆலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த ஆலை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
எலெக்ட்ரிக் காரின் விலையில் லித்தியம் அயான் பேட்டரிதான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே லித்தியம் அயான் பேட்டரியையும், கார்களை அசெம்பிள் செய்யும்போது, விலை கணிசமாக குறையும். எனவே, ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை பெற முடியும்.
இந்தியாவில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார்களை உள்நாட்டு சந்தையை தவிர்த்து, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், எலெக்ட்ரிக் கார் உற்பத்தி கட்டமைப்பை தொடர்ந்து விரிவாக்கம் செய்யவும் ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.
இதுதவிர்த்து, எலெக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதத்தில், சார்ஜ் ஏற்றும் மையங்களை அதிக அளவில் நிறுவுவதற்கான முயற்சிகளையும் ஹூண்டாய் மேற்கொள்ள இருக்கிறது. இதனால், நகர்புற பயன்பாட்டின்போதும், நீண்ட தூர பயணங்களின்போதும் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாகும்.
Source: ET Auto