Just In
- 1 hr ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 2 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- News ஐஏஎஸ்னா சும்மாவா? இதுதான் யுபிஎஸ்சி தேர்வின் மறுபக்கம்! 12 முறை தோற்றவரின் அனுபவம்! ரொம்பவே ரிஸ்க்
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்...
ஓட்டுநரின் உணர்வையறிந்து, தானாக செயல்படுகின்ற வகையிலான செயற்கை நுண்ணறிவு கொண்ட காரை பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இனி உங்கள் கார், உங்கள் மன நிலையைப் பொருத்து செயல்படும். நீங்கள் சோகமாக இருந்தால் அது உங்களை உற்சாகப்படுத்தும் வகையில் செயல்படும். இதற்கான, ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட சிஸ்டத்தை உருவாக்கும் பணியில் பிரபல ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இது, காருக்குள் பயணிப்பவரின் முக பாவனையை ஸ்கேன் செய்து செயல்படும் தொழில்நுட்பம் ஆகும். ஆனால், இது பிரத்யேகமாக ஓட்டுநர் இருக்கையில் அமருபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
அதேசமயம், இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தொழில்நுட்பமானது, கேபின் அமைப்பையும், ஓட்டுநரின் இருக்கையையும் கட்டுபடுத்தும் வகையிலும் தன்மையையும் பெற்றிருக்கின்றது.
இந்த புதிய தொழில்நுட்பம் ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட கேமிரா மற்றும் பயோமெட்ரிக் மெஷின்மூலம் இயங்கும். இது ஓட்டுநரை நேரடியாக கண்கானித்து, மதிப்பீடு செய்யும். அவ்வாறு, இந்த தொழில்நுட்பம் ஓட்டநரின் உணர்வை தானாக உணர்ந்து, அவருக்கு தேவையென்றால், வெப்பம், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்பு, மீடியா மற்றும் சுற்றுப்புற விளக்குகள் உள்ளிட்ட அம்சங்களை அது தானாக மாற்றியமைக்கும்.
இந்த அமைப்புகள் அனைத்தும் ஓட்டுநரின் முகப் பாவனையை வைத்தே மாற்றியமைக்கப்படுகின்றன. இந்த புதிய திட்டமானது, வாகன ஓட்டியின் மன உலைச்சலைக் குறைக்கவும், அவர்களை குஷிப்படுத்தும் நோக்கிலேயே தயார் செய்யப்பட்டுள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவரின் இந்த முயற்சிக்கு, 78 சதவிகித வாகன ஓட்டிகள், பணியின் காரணமாகவும், மன உலைச்சலின் காரணமாகவும் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதே காரணமாக இருக்கின்றது. மேலும், அவர்கள் அவ்வாறு, மன உலைச்சலுடன் வாகனத்தை இயக்கும்போது, பெரும் பின்விளைவுகளைச் சந்திக்கின்றனர். இதன்காரணமாக, இவற்றைக் குறைக்கும் விதமாக இந்த புதிய தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
மனநிலை கண்டறியும் சிஸ்டமானது, தொடர்ச்சியாக ஓட்டுநரின் முகபாவனைகளை பதிவு செய்யும். அவ்வாறு, அவரின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு, அது தானாக இயங்கி பல அம்சங்களைக் கட்டுபடுத்துகின்றது. மேலும், ஓட்டுநருக்கு தேவையான அமைப்புகளையும் அது தானாக கண்டறிந்து கொள்கின்றது. அவ்வாறு, கண்டறிந்த அமைப்புகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு, அடுத்தமுறை அவர் காரை இயக்கும்போது, அதே அமைப்பை அந்த சிஸ்டம் தானாக ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
அதேசமயம், செயற்கை நுண்ணறிவுக் கொண்ட இந்த சிஸ்டம், ஓட்டுநர் மன உலைச்சலில் இருப்பதைக் கண்டறிந்தால், அவரைச் சாந்தம் செய்யும்வகையில், வண்ணம் நிறைந்த விலக்குகளால் காரை அலங்கரிக்கின்றது. அதாவது, அவரின் மனதை ஒருநிலைப்படுத்தும் வகையிலான வண்ண மின் விளக்குகளை ஒளிரச் செய்து, அவரை சாந்தம் செய்யும். மேலும், அவருக்கு பிடித்தமான பாடல் அல்லது இசையையும் அது ஒலிக்க செய்கின்றது.
இத்துடன், சோர்வு மற்றும் உணர்வைக் கொண்டு, கேபினின் வெப்பநிலையையும் அது குறைக்கும். தற்போது, ஓட்டுநர்களுக்காக தயார் செய்யப்பட்டு வரும் இந்த தொழில்நுட்பத்தை, காரில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்காகவும், ஜாகுவார் நிறுவனம் தயார் செய்ய இருக்கின்றது. இதற்கான முயற்சிகளையும், ஆய்வுகளையும் அந்நிறுவனம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
இதற்காக, முன் இருக்கையின் ஹெட் ரெஸ்ட் பகுதியில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமிரா பொருத்தப்பட உள்ளது. இது, காரில் அமர்ந்து செல்லபவர்களின் உணர்வுகளை உட்கொணர்ந்து செயல்படும். அவ்வாறு, பயணி சோர்வாக இருப்பதை அது உணர்ந்தால், மின் விளக்குகளை மங்கச் செய்து அவருக்கு உறங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும், அதற்கேற்பவாறு வெப்பநிலையையும் அது மாற்றியமைக்கும். இந்த சொகுசு வசதிகள், பயணிகளுக்கு வீட்டில் இருப்பதைப்போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையிலேயே, இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட மனநிலையைக் கண்டறியும் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற பலதரப்பட்ட வசதிகளை அதன் வாகனங்களில் நிறுவும் வகையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக, அந்நிறுவனம் பலதரப்பட்ட ஆய்வுகளையும் தொடர்ச்சியாக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் பயணி மற்றும் வாகன ஓட்டி என இரு தரப்பினரையும் மையமாகக் கொண்டே அவை தயாராகி வருகின்றன.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி