Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மின்சார கார்களை வரிசை கட்டப்போகும் ஜீப் நிறுவனம்!
வரும் 2022ம் ஆண்டு முதல் மின்சார கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்த ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களும் மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் எஸ்யூவி தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. எஸ்யூவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிகளை தொடர்ந்து பின்பற்றி வருவதால், ஜீப் எஸ்யூவிகளுக்கு பெரும் ரசிக பட்டாளமும், வாடிக்கையாளர் வட்டமும் உள்ளது.
குறிப்பாக, ஆஃப்ரோடு எஸ்யூவிகளை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், எதிர்கால வர்த்தகத்தை வலுவாக வைத்திருக்கும் விதத்தில், பேட்டரியில் இயங்கும் மின்சார மாடல்களை களமிறக்க உள்ளதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் 2022ம் ஆண்டு முதல் ஹைப்ரிட் மற்றும் மின்சார மாடல்களை களமிறக்கும் பணியை துவங்க இருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு ஹைப்ரிட் மாடல்கள் வீதமும், தொடர்ந்து எலெக்ட்ரிக் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.
ஏற்கனவே, க்ராண்ட் கமாண்டர் உள்ளிட்ட எஸ்யூவிகளின் ஹைப்ரிட் மாடல்களை ஜீப் விற்பனை செய்கிறது. இந்த நிலையில், ரேங்லர், க்ராண்ட் கமாண்டர், காம்பஸ், ரெனிகேட் ஆகிய மாடல்கள் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இதுதவிர்த்து, லெவல் 3 ஆட்டோனாமஸ் கார்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து ஜீப் நிறுவனத்தின் தலைவர் க்றிஸ்டியன் மியூனிர் கூறுகையில்," பசுமை எஸ்யூவிகளை கொண்ட சிறந்த பிராண்டாக ஜீப் மாறும். எங்களது மின்சார எஸ்யூவி மாடல்கள் அதிசெயல்திறன் மிக்கதாகவும், மிக வேகமானதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதவிர்த்து, வரும் 2021ம் ஆண்டு முதல் டீசல் எஞ்சின் கார்களை முற்றிலும் நிறுத்துவதற்கும் ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் மின்சார மாடல் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அடுத்த சில ஆண்டுகளில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. இதன்மூலமாக, இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டிலும் ஜீப் முக்கிய இடத்தை பெற முடியும்.
மேலும், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் எஸ்யூவி மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி வேறு பெயரில் அறிமுகமாகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு இது போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு