Just In
- 37 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!
சட்டத்தின் பிடியில் அனைவரும் ஒன்றுதான், போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் டிராஃபிக் போலீஸார் தரமான சம்பவத்தை செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் அண்மைக் காலங்களாக போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையே மிக முக்கியமானதாக இருக்கின்றது.
மேலும், விதிமீறல்களால் உருவாகும், விபத்து உள்ளிட்ட பின் விளைவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இது, போக்குவரத்துத்துறைக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதில் தீர்வு காண்பதில் அவர்களுக்கு பெரும் சிக்கல் நிலவி வருகின்றது.
ஆகையால், தங்களின் பணியை சுலபமாக்கிக் கொள்ளும் விதமாக, தற்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். அதில், மிக முக்கியமானதாக சிசிடிவி கேமிராக்களின் பயன்பாடு மாறியிருக்கின்றது.
நாட்டில் அரங்கேறும் பல்வேறு குற்றச் சம்சங்களில் தீர்வு காண்பதற்கும் இது முக்கிய பங்களிக்கின்றது.
ஆகையால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கண்கானிக்கும் விதமாக நாட்டின் பல முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கான தண்டனையை வழங்க உதவுகின்றது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சரான சிபி சிங், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, சிசிடிவி கேமிரா புகைப்படத்தை வைத்து போலீஸார் அபராதச் செல்லாண் வழங்கியுள்ளனர்.
பொதுமக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய போக்குவரத்துத்துறை அமைச்சரே, இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அம்மாநிலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை நியூஸ் 11 என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதமீறலுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் இவ்வாறு செய்திருப்பது, அக்கட்சியில் அவருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம், அம்மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அமைச்சரின் டொயோட்டா பார்ச்சூனர் கார், சிவப்பு மின் விளக்கு சிக்னலை மீறிச் சென்றுள்ளது. இதையறிந்த, அம்மாநில போக்குவரத்துத்துறை போலீஸார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட அமைச்சரின் காருக்கு அபராதச் செல்லாணை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆகையால், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிபி சிங் ரூ. 100 அபராதத்திற்கான இ-செல்லாணைப் பெற்றுள்ளார்.
இந்த தொகையை அவரது உதவியாளரிடம் கட்டிவிடுமாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் விரும்பினால், அதிகாரிகளும் விதிகளை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.
இதேபோன்று, முன்பு ஒரு முறை அபராதம் செலுத்தியிருப்பதாக அவர் நினைவு கூர்ந்தார். மேலும், சமீபத்தில் போக்குவரத்துத்துறை காவல் அதிகாரி ஒருவர், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டியை விரட்டிச் செல்வதைக் கண்ட அவர், காவலர்களுக்கு பயனளிக்கும் விதமாக தானியங்கி நம்பர் பிளேட் ரீடரை அறிமுகம் செய்திருந்தார்.
காவலர் செய்த செயல், விபத்துகளை உருவாக்கும் என்பதால், அதனைத் தவிர்க்கும் விதமாக இத்திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். ஆனால், அவர் அறிமுகம் செய்திருந்த திட்டமே அவருக்கு சோதனையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சட்டத்தின் பிடியில் அனைவரும் ஒன்று தான். அதில், அமைச்சராக இருந்தால் என்ன... குடிமகனாக இருந்தால் என்ன... யாராக இருந்தாலும், குற்றத்திற்கு உரிய தண்டனையை அடைந்தே ஆக வேண்டும்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், அம்மாநில போக்குவரத்துத்துறை போலீஸார், அதே துறையின் அமைச்சருக்கு அபராதத்திற்கான செல்லாணை அனுப்பி வைத்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அநேகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
அமைச்சர் பயன்படுத்தும் டொயோட்டா பார்ச்சூனர் கார், அரசின் அதிகாரப்பூர்வமான வாகனம் ஆகும். இது அவரது கடமைகளைச் செய்ய உதவியாக இருக்கும் வகையில் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சிபி சிங்கின் கார் விதியை மீறிச் சென்றது குறித்த புகைப்படம் மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை நீங்கள் மேலே காணலாம்...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!