Just In
- 1 hr ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 2 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 3 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 3 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.. இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்..
ஆந்திராவில் உற்பத்திச் சாலையை துவங்கியுள்ள கியா நிறுவனம், வருகின்ற 2022ம் ஆண்டு வரை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஓர் புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், இனி ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்தியாவில் ஓர் புதிய காரை காணும் வாய்ப்பு இந்தியர்களுக்கு உருவாகியுள்ளது.
தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக அதன் புதிய மாடல் கார் ஒன்றை கடந்த 20ம் தேதி, புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்தது. இதனை உலகளாவிய வெளியீடாகவே அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. அந்தவகையில், புதிய செல்டோஸ் என்ற மாடலைத் தான் கியா நேற்றைய முன்தினம் காட்சிப்படுத்தியிருந்தது.
கியாவின் இந்த செல்டோஸ் கார், பல நாட்களாக டீசர் வீடியோவில் மட்டும், பகுதி பகுதியாக காட்சியளித்து வந்தநிலையில், கடந்த வியாழனன்றுதான் முழுமையான காட்சியை அதன் ரசிகர்களுக்கு வழங்கியது. இந்த காரின் வெளியீட்டின்போது, விற்பனைக்குண்டான அறிமுகம் குறித்த எந்தவொரு தகவலையும் கியா வெளியிடவில்லை. இருப்பினும், இந்த கார் வருகின்ற பண்டிகை நாட்களில் ஏதேனும் ஓர் நாளில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது ஆகஸ்டு மாதமாககூட இருக்கலாம் என கூறப்படுகின்றது.
அதேபோன்று, ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் முதல், புதிய செல்டோஸ் காருக்கான புக்கிங் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியிருப்பதால் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த கார் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிளாணட்டில் வைத்து தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்டு வருவதால், நியாயமான விலையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், புதிய செல்டோஸ் காருக்கு ரூ. 11 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், இந்த கார் இந்தியா மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன், அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில கண்டங்களுக்கும் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, மேலும் சில நாடுகளுக்கு இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது.
இந்நிலையில், கியா நிறுவனம் மேலும் நான்கு மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக வெவ்வெறு விதமான மாடல்களில் அந்த கார்கள் களமிறக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 2022ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை, ஓர் புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் அறிவித்திருந்தது. அந்தவகையில், கூடிய விரைவில் கியா நிறுவனத்தின், அடுத்த தலைமுறை டிசைன் கொண்ட, நான்கு புத்தம் புதிய மாடல் கார்கள் இனி வரிசையாக களமிறக்கப்பட உள்ளன. அதற்கான பணியில்தான் கியா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகின்றது.
இத்துடன், புதிய செல்டோஸ் காரின் பிளாட்பாரத்தில் வைத்து, ஹூண்டாயின் அடுத்த தலைமுறை க்ரெட்டா மாடலும், எம்பிவி ரகத்திலான 7 சீட்டர் மாடலும் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இதில், 7 சீட்டர் எம்பிவி ரக கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா மாடலுக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ளது.
அதேசமயம், கியா நிறுவனம் முழுக்க முழுக்க அதன் பார்வையை எஸ்யூவி பக்கம் வைத்திருப்பதால், அதன் அடுத்த மாடல்களும் எஸ்யூவி ரகத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில், சப்-4 மீட்டர் ரகத்திலான எஸ்யூவி காரும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?