Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முன்னாள் டிஜிபியின் அதிரடியால் அரசியல் கட்சிகள் கலக்கம்... தேர்தல் சமயத்தில் வைத்த ஆப்பு இதுதான்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முன்னாள் டிஜிபி ஒருவர் அதிரடி காட்டி வருவதால், அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
இந்தியாவில் தேர்தல் திருவிழா களை கட்ட தொடங்கி விட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, இந்தியாவின் 17வது மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்தது. மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தமிழகம் (39) மற்றும் புதுச்சேரியில் (1) மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தற்போது அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் பிரச்சாரம் இன்னும் ஒரு சில நாட்களில் சூடுபிடிக்கவுள்ளது. தேர்தல் சமயங்களில், வாக்காளர்களை கவர ரோடு ஷோ (Roadshow) மற்றும் பைக் பேரணிகளை (Bike Rallies) நடத்துவது என்பது பல்வேறு அரசியல் கட்சிகளின் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் தேர்தல் சமயங்களில், ரோடு ஷோ மற்றும் பைக் பேரணிகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் டிஜிபியும் (DGP), சுற்றுச்சூழல் ஆர்வலருமான விக்ரம் சிங்தான் உச்சநீதிமன்றத்திடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். மற்றொரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான சாய்விகா அகர்வாலுடன் இணைந்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் சமயங்களில் நடைபெறும் ரோடு ஷோ மற்றும் பைக் பேரணிகளால் காற்று மற்றும் ஒலி மாசுபாடு ஏற்படுவதாக மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர். அத்துடன் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் இது வழிவகுக்கிறது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது எனவும், எனவே ரோடு ஷோ மற்றும் பைக் பேரணிகளை நடத்த தடை விதிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான ரோடு ஷோக்கள், பிரபலங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், கிச்சன், ஹைட்ராலிக் லிஃப்ட், டிவி, இன்டர்நெட் என சொகுசான வசதிகள் செய்யப்படுகின்றன.
இத்தகைய வாகனங்களின் விலை மிகவும் அதிகம். இதன்மூலம் தேர்தல் ஆணையம் அனுமதித்ததை காட்டிலும் அதிகமாக செலவு செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது, தீவிரவாத தாக்குதல்களால் விவிஐபிக்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே இவை அவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.
அரசியல் பேரணியின்போது நடந்த தீவிரவாத தாக்குதலால் இந்த நாடு ஏற்கனவே முன்னாள் பிரதமரை இழந்துள்ளது. இதேபோல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், அரசியல் ரோடு ஷோவின்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய பென்ச் முன்பு கடந்த திங்கள் கிழமை (மார்ச் 11) வலியுறுத்தப்பட்டது. எனினும் அவசர வழக்காக விசாரிக்க பென்ச் மறுத்து விட்டது.
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!