Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 8 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எலெக்ட்ரிக் கார்களுக்கான போர்ட்டபிள் பேட்டரி: மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம்!
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான போர்ட்டபிள் பேட்டரியை மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளும், திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிக முக்கியமான நடைமுறை பிரச்னை, அதிக தூரம் பயணிக்க இயலாது என்பதாக உள்ளது.
திறன் வாய்ந்த பேட்டரிகள் மூலமாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகள் நடந்து வருகிறது. அதிக ரேஞ்ச் கொண்ட கார் அல்லது மின்சார வாகனங்களாக இருந்தாலும், நீண்ட தூர பயணங்களின்போது வழியில் நின்றுவிட்டால் சிக்கலாகிவிடும். இதுதான் வாடிக்கையாளர்கள் தயங்குவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு கிடைக்க துவங்கியிருப்பது சிறந்த விஷயம். இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜ் தீர்ந்து போனால், உடனடியாக சார்ஜ் ஏற்றுவதற்கான போர்ட்டபிள் பேட்டரி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, மொபைல்போன்களுக்கு பவர் பேங்க் வழங்கப்படுவது போலவே இந்த பேட்டரியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சார்ஜ்க்ரிட் என்ற பெயரில் 4 மாடல்களில் இந்த போர்ட்டபிள் பேட்டரி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லைட் என்ற பெயரிலான மாடல் ரூ.11,799 விலையிலும், புரோ-3பி மாடல் ரூ.32,499 விலையிலும் புரோ- டி2 மாடல் ரூ.39,499 விலையிலும் மற்றும் அல்ட்ரா என்ற மாடல் ரூ.48,699 விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
எலெக்ட்ரிக் கார் மற்றும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு இந்த போர்ட்டபிள் பேட்டரி சார்ஜரை பயன்படுத்த முடியும். பழைய மாடல்கள் மற்றும் புதிய மாடல்களுக்கும் ஏதுவான போர்ட்டுகளுடன் வந்துள்ளது. டைப்-2 கனெக்டர் வசதியும் இந்த எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த போர்ட்டபிள் பேட்டரிகளை தனது லிங்க்ஸ் டீலர்கள் வழியாகவும், அமேஸான் தளம் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் மூலமாகவும் விற்பனை செய்வதாக மெஜந்தா பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொபைல்போன் செயலி மூலமாக இந்த போர்ட்டபிள் சார்ஜரை மீண்டும் சார்ஜ் செய்வதற்கான புக்கிங், அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையம் குறித்த தகவல்களை பெற முடியும். தனிநபர், வர்த்தகர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என அனைத்து பயன்பாட்டையும் மனதில் வைத்து இந்த போர்ட்டபிள் பேட்டரி சார்ஜரை அறிமுகம் செய்துள்ளதாக மெஜந்தா பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு இந்த போர்ட்டபிள் பவர் பேங்க் மிகச் சிறந்த தீர்வாக அமையும். எலெக்ட்ரிக் கார் வாங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும்.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!