Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஃபோர்டு இந்தியா பிராண்டை தூக்கி நிறுத்த 3 எஸ்யூவிகளுடன் முண்டாசு கட்டிய மஹிந்திரா!
மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுவிட்டது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகளை மஹிந்திரா கவனிக்க இருக்கிறது.
ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி பணிகளையும், புதிய கார் உருவாக்கப் பணிகளையும் மஹிந்திராவின் கட்டுப்பாட்டில் உருவாக்கப்படும் மஹிந்திரா - ஃபோர்டு கூட்டு நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.
மேலும், ஃபோர்டு இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் குஜராத் ஆலைகளையும் மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி நிறுவனத்திடம் செல்ல இருக்கிறது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திராவும், 49 சதவீத பங்குககள் ஃபோர்டு வசமும் இருக்கும்.
மஹிந்திரா - ஃபோர்டு கூட்டு நிறுவனமானது மஹிந்திரா கட்டுப்பாட்டில் செயல்பாட்டிலும், நிர்வாக ரீதியில் ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பர். இந்த நிலையில், வரும் ஆண்டு மத்தியில் இருந்து இந்த கூட்டு நிறுவனம் செயல்பட துவங்கும்.
இந்த நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் திட்டங்களை மஹிந்திரா கையில் எடுத்துள்ளது. அதன்படி, ஃபோர்டு பிராண்டில் 3 புதிய எஸ்யூவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இதில், புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவி ஒன்றும் இடம்பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவியானது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும். அதாவது, சில மஹிந்திரா கார்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்டு ஃபோர்டு பிராண்டில் வரும் என்று தெரிகிறது. தவிரவும், புதிய எஸ்யூவி மாடல்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மூன்று எஸ்யூவி மாடல்களுமே இப்போது உருவாக்கப் பணிகளில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எஸ்யூவி மாடல்களுக்குத்தான் அதிக வரவேற்பு இருப்பதால், பல்வேறு விதமான பட்ஜெட்டில் புதிய எஸ்யூவி கார்களை ஃபோர்டு பிராண்டில் வெளியிட மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த கார்களில் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கும் புதிய எஞ்சின்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய மாடல்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்டு பிராண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஸ்யூவி கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். மேலும், வெளிநாடுகளில் மஹிந்திரா கார்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஃபோர்டு நிறுவனத்தின் டீலர் நெட்வொர்க்குகளை பயன்படுத்திக் கொள்ளவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?