வருகிறது மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல்!
மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா தார் எஸ்யூவி சிறந்த தேர்வாக இருக்கிறது. தக்க தகவமைப்புகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சரியான விலை என ஆஃப் ரோடு எஸ்யூவி பிரியர்களின் முதன்மை தேர்வாக இருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. 2015-ல் சிறிய அளவிலான மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. அதேபோன்று அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.

தற்போது விற்பனையில் உள்ள முதல் தலைமுறை தார் எஸ்யூவி இதற்கு ஈடானதாக இல்லை. இதையடுத்து, சில மாதங்களில் தார் எஸ்யூவி விலக்கி கொள்ளப்பட உள்ளது.

அதற்கு முன்னர், மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சேர்க்கப்பட உள்ளது. அண்மையில் வந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட உள்ளது.

இதனிடையே, புதிய க்ராஷ் டெஸ்ட் மற்றும் மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வடிவத்தில் பெரிதாகவும், தொழில்நுட்ப சிறந்த காராகவும் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
Source:ACI


Click it and Unblock the Notifications








