Just In
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 9 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Movies ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்திய ராணுவத்திற்காக களமிறக்கப்பட்ட மின்சார கார்கள்.. இதன் சிறப்பு தெரிஞ்சா மெய்சிலிர்த்துடுவீங்க!!
இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பத்து மின்சார கார்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.
மாசு, இதுதான் தற்போது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விலங்க ஆரம்பித்துள்ளது. நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து பொருள்களும், ஏதேனும் ஒரு வழியில், நாம் வாழும் இந்த பூமியை மாசடையச் செய்து வருகின்றது.
அதிலும், மிக முக்கியமாக நாம் பயன்படுத்தும் எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, மிகப் பெரிய பேரழிவிற்கு முக்கிய காரணமாக. உதாரணமாக, காற்று மாசு, புவி வெப்ப மயமாதல் உள்ளிட்டவற்றிற்கு இதுவே ஆணி வேராக இருக்கின்றது. மேலும், பல உயிர்கள் இறப்பதற்கும் இதுவே தூண்டுகோலாக இருக்கின்றது.
இதன்காரணமாகவே, உலக நாடுகள் அனைத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றது.
பல நாடுகளில் ஏற்கனவே மின் வாகனங்கள் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்துவிட்டநிலையில், இந்தியா சமீபகாலமாக இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
அந்தவகையில், அண்மைக் காலங்களாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து எரிபொருள் வாகனங்களை அடியோடு ஒழித்துக்கட்டும் விதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
அதற்கேற்ப வகையில், எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக போர் தொடுத்திருப்பதைப் போன்று, பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக மத்திய அரசு அறிவித்து வருகின்றது.
அதேசமயம், மின் வாகனங்களின் பயன்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னோடியாக விளங்கும் வகையிலான செயல்களை செய்து வருகின்றது.
அந்தவகையில், பொது சேவையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றுவது மற்றும் அரசு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களைப் பயன்பாட்டுக் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.
அந்தவகையில், அண்மையில்கூட தனது மாநில மக்களுக்கு முன்னோடியாக திகழும் வகையில், பிஹார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் டாடா நிறுவனத்தின் டிகோர் மின்சார காரில் சட்டசபை வந்திருந்தார். மேலும், இந்த காரைதான் அவர் இனி வரும் காலங்களில் பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு, மக்கள் மத்தியில் மின் வாகனங்களின் பயன்பாட்டினை கொண்டு சேர்க்கும் விதமாக, அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இஇஎஸ்எல் திட்டத்தின்படி, ராணுவ பயன்பாட்டிற்காக மஹிந்திரா நிறவனத்தின் இ-வெரிடோஸ் எலெக்ட்ரிக் கார்கள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, 10 கார்கள் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளது. இந்த பத்து கார்களுமே, மஹிந்திர நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட முதல் பேட்ச் எலெக்ட்ரிக் கார்களும்.
காரின் புகைப்படங்களை நீங்கள் கீழே காணலாம்...
அரசின் பல்வேறு நிறுவனங்களுக்கு இஇஎஸ்எல் திட்டத்தின்கீழ் மின் வாகனங்கள் வழங்கப்பட்டு வரும்நிலையில், நாட்டின் மிக முக்கியமான மற்றும் நாட்டு மக்கள் அனைவராலும் மதிப்புக்குறிய வகையில் போற்றப்படும் ராணுவ துறையை சிறப்பிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பத்து மின் வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
முன்னதாக கூறியதைப்போன்று, நமது நாட்டில் சமீபகாலமாக காற்று மாசு என்பது மிகப்பெரிய தலைவலியாக மாறிக் கொண்டிருக்கின்றது. அதிலும், மிக முக்கியமாக நாட்டின் தலைநகர் டெல்லியில் இது தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றது.
தற்போது, மத்திய அரசு மேற்கொண்டு வரும் இத்திட்டம் தலைநகரில் கணிசமாக காற்று மாசை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று, நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டைக் கொண்டுவரும் வகையில், அதன்மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைத்து அண்மையில் அறிவித்தது.
இதனால், மின்வாகனங்களின் விலை ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை குறைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
மஹிந்திரா நிறுவனம், இந்த இ-வெரிட்டோ காரை கடந்த 2016ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில்தான் முதல்முறையாக அறிமுகம் செய்திருந்தது. இந்த காரில் 72v திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
இது, 40.44 பிஎச் பவரையும், 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்தது, 100கிமீ தூரம் செல்ல முடியும் என கூறப்படுகின்றது.
செடான் ரகத்தில் காட்சியளிக்கும் இந்த கார் மொத்தம் 3 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.
இதில், ஒவ்வொரு வேரியண்டும் ஒவ்வொரு விதமான பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்டவற்றைப் பெற்றிருக்கின்றன. இந்த கார் ரூ. 7.46 லட்சம் என்ற விலையில் கிடைக்கும்.
மின்வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதனால், ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் 50 மில்லியன லிட்டர் பெட்ரோல் கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்படும். இத்துடன், 5,69,000 டன் CO2 வெளியேற்றமும் குறையும். அத்துடன், தற்போது ஏற்படும் பயணச் செலவைக் காட்டிலும் மின் வாகனங்களின் பயன்பாட்டிலும் மிக மலிவான அளவில் குறைக்க முடியும்.
அந்தவகையில், கிலோ மீட்டர் ஒன்றிற்கு 0.85 பைசா மட்டுமே செலவாகும் என கூறப்படுகின்றது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இது ரூ. 6.5-ஆக இருக்கின்றது.