Just In
- 48 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!
சக்திவாயந்த புதிய டீசல் எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதற்காக, அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரான எஞ்சின்களுடன் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்டான மஹிந்திரா நிறுவனமும் பிஎஸ்-6 மாடல்களை அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறது.
மேலும், தனது ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மாடல்களில் புத்தம் புதிய டீசல் எஞ்சினை பயன்படுத்த இருக்கிறது மஹிந்திரா. அந்த வகையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. ஆனால், பிஎஸ்-6 மாடலில் இடம்பெற இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 185 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதனால், பிஎஸ்-6 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. இதுதவிர்த்து, மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் சோதனை செய்து வருகிறது. இந்த எஞ்சின் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல்களில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது கடந்த சில மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாற்றங்களும் செய்து மேம்படுத்தப்படுகிறது.
மேலும், புதிய மாடலின் டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்களை செய்து மஹிந்திரா அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. பம்பர், ஹெட்லைட், க்ரில், பின்புற பம்பர் ஆகியவற்றில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். ஆக மொத்தத்தில் மிகச் சிறந்த அம்சங்களுடன் களத்தில் இறங்க இருக்கிறது.
புதிய மாற்றங்கள், பிஎஸ்-6 எஞ்சின்களுடன் விலையும் சற்று அதிகமாக இருக்கும். டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் தொடர்ந்து போட்டி போடும். இது 7 சீட்டர் மாடலாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக உள்ளது.
Image Courtesy: Sarath Santham
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..