Just In
- 42 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 56 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோர விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய 2 கார்கள்... கடவுளாக வந்து பல உயிர்களை காப்பாற்றியது இதுதான்
கோர விபத்தில் இருந்து 2 கார்கள் நூலிழையில் தப்பிய வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், இந்திய சாலைகள் உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக திகழ்கின்றன. இந்திய சாலைகள் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் உயிர்களை காவு வாங்குவதாக உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பது அபாயகரமானது. ஏனெனில் இங்கு ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்ட கால்நடைகளுடன் சேர்த்து வாகனங்களும் திடீர் திடீரென குறுக்கே வரும். அப்போது மிக அதிக வேகத்தில் பயணித்து கொண்டிருந்தால், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நேரலாம்.
இதனை நன்கு அறிந்திருந்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் தொடர்ந்து அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி கொண்டேதான் உள்ளனர். உலக அளவில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்க இதுவும் ஒரு முக்கியமான காரணம்.
இந்த சூழலில், கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-17ல், மஹிந்திரா எக்ஸ்யூவி500 (Mahindra XUV500) கார் ஒன்று, மிக அதிக வேகத்தில் பயணித்து கொண்டிருந்தது. இது எஸ்யூவி வகையை சேர்ந்த ஆகும்.
மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர்கள் என்ற அதிவேகத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 சென்று கொண்டிருந்த நிலையில், சாலை சந்திப்பு ஒன்று வந்தது. அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார் திடீரென சாலையை கடக்க முயன்றது.
இதனால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டொயோட்டா இன்னோவா ஆகிய 2 கார்களும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு அசம்பாவிதம் நிகழவில்லை. இன்னோவா கார் சாலையை கடக்க முயல்வதை பார்த்ததும், எக்ஸ்யூவி500 காரின் டிரைவர் உடனே பிரேக்கை மிதித்தார்.
இதனால் நல்ல வேளையாக கார் அப்படியே நின்று விட்டது. இதற்கு எக்ஸ்யூவி500 காரின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்திற்குதான் (ABS-Anti-lock Braking System) நன்றி சொல்லியாக வேண்டும். ஏனெனில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாமல் போயிருந்தால் நிலைமை தலை கீழாக மாறியிருக்கும்.
இரண்டு கார்களும் பயங்கரமாக மோதிக்கொண்டு, அதில் பயணம் செய்தவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லாத காராக இருந்திருந்தால், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த சூழலில் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
வாகனங்களுக்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. சாலை விபத்துக்களில் இருந்து வாகன ஓட்டிகளையும், அதில் பயணம் செய்பவர்களை காக்கும் ஆபத்பாந்தவனாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் திகழ்ந்து வருகிறது.
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தின் முக்கியத்துவத்தை மத்திய அரசும் நன்றாக புரிந்து கொண்டுள்ளது. எனவே 125சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரண்டு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி 125சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும், குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தையாவது வாகன உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும்.
இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக, வாகனங்களில் போதுமான அளவிற்கு அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது.
இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாரத் புதிய வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டம் (Bharat New Vehicle Safety Assessment Program-BNVSAP), மத்திய அரசால் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர் பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை இந்த திட்டம் கட்டாயமாக்குகிறது.
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்று எஞ்சிய பாதுகாப்பு வசதிகளும் முக்கியமானவைதான். இதன்மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் மத்திய அரசின் உத்தரவிற்கு இணங்க, மேற்கண்ட பாதுகாப்பு வசதிகளை, வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூடுதலாக வழங்க வேண்டியிருப்பதால், வாகனங்களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விலையை காட்டிலும் பாதுகாப்பே முக்கியம்.
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!