Just In
- 1 hr ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 4 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாருதி சியாஸ் காரில் அட்டகாசமான புதிய வசதி அறிமுகம்!
மாருதி சியாஸ் காரில் பூட்ரூமை திறப்பதற்கான புதிய தொழில்நுட்ப வசதி மிக மிக குறைவான விலையில் அளிக்கப்படுகிறது. அதன் விபரம், விலை உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி சியாஸ் கார் நம்பர்-1 சாய்ஸாக இருந்து வருகிறது. இருப்பினும், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களால் கடும் சந்தைப் போட்டியை சந்தித்து வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு, கடந்த மாதம் ஹூண்டாய் வெர்னா விற்பனையில் முதலிடத்தை பிடித்தது.
இதனால் அதிர்ந்து போயுள்ள மாருதி கார் நிறுவனம், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அட்டகாசமான புதிய வசதியை மாருதி சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஆட்டோ டிரக் ஓபனர் என்ற புதிய வசதியை அளிக்கிறது.
அதாவது, ரிமோட் மற்றும் சாவி மூலமாக திறக்கும் வசதிகளை தவிர்த்து, புதிய சியாஸ் காரில் கெஸ்ச்சர் கன்ட்ரோல் எனப்படும் கால் நகர்வு மூலமாக பூட்ரூம் மூடியை திறக்கும் வசதி அளிக்கப்படுகிறது. பம்பருக்கு கீழ் பகுதியை காலை குறிப்பிட்ட முறையில் நகர்த்தினால் பூட் ரூம் மூடி தானாக திறந்து கொள்ளும்.
இந்த புதிய தொழில்நுட்ப வசதிக்கு ரூ.3,390 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 2019 மாடல் சியாஸ் கார் மட்டுமல்ல, பழைய சியாஸ் கார்களிலும் இந்த ஆட்டோ டிரங்க் ஓபனர் என்ற வசதியை மேற்கண்ட கட்டணத்தை செலுத்தி பொருத்திக் கொள்ளலாம்.
விலை உயர்ந்த கார்களில் மட்டுமே காணக்கிடைக்கும் இந்த அட்டகாசமான வசதியை, பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டுள்ளோரை கவரும் வகையில் இந்த வசதியை மிக குறைவான விலையில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சியாஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.
மாருதி சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இரண்டு எஞ்சின்களுமே பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானவைதான். ஆனால், பெட்ரோல் மாடலானது விரைவில் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தப்படும்.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!