Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!
மாருதி எர்டிகா காரின் ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி எர்டிகா கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்பதிவிலும் அசத்திய இந்த காருக்கு தற்போது பல மாதங்கள் காத்திருப்பு காலம் நிலவுகிறது. அண்மையில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், மாருதி எர்டிகா காரின் ஸ்போர்ட் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோதே, இந்த மாடல் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், மணிகன்ட்ரோல் தளத்தின் செய்தியின்படி புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்போர்ட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. மாருதி எர்டிகா காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும்.
மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடலில் விசேஷ பாடி கிட் ஆக்சஸெரீகள் மூலமாக மிக வசீகரமாக மாறுதல்களை பெற்றிருக்கிறது. குறிப்பாக, முன்புற, பின்புற பம்பர்களில் கூடுதல் ஆக்சஸெரீகள், ஸ்கிட் பிளேட், சைடு ஸ்கர்ட்டுகள், ரியர் ஸ்பாய்லர் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் காரில் தனித்துவமான டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றிருப்பதும் காரின் கவர்ச்சியை கூட்டுவதாக இருக்கிறது.
உட்புறத்தில் முக்கிய மாற்றமாக 6 இருக்கை வசதி கொண்டதாக வர இருக்கிறது. நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. மர அலங்காரத் தகடுகள் கவர்ச்சியை கூட்டுவதாக இருக்கிறது.
புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடலில் ஸ்மார்ட்ப்ளே சிஸ்டமும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை அளிக்கும்.
புதிய மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கலாம். சாதாரண மாடலைவிட ரூ.60,000 வரை கூடுதல் விலையில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
Source: Moneycontrol
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!