Just In
- 5 min ago
சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?
- 18 min ago
இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...
- 34 min ago
டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?
- 1 hr ago
மின்சார கார்களை வரிசை கட்டப்போகும் ஜீப் நிறுவனம்!
Don't Miss!
- News
நீங்க எம்பிஏ படிக்கணுமா? ஏன் எலக்ட்ரீசியன் ஆக கூடாது? இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க!
- Sports
கிரிக்கெட் வீரர்கள் ஹேர்ஸ்டைலுக்கு பின் இருக்கும் ஃபுட்பால்.. ரகசியத்தை உடைத்த ரோகித்!
- Movies
60 படங்கள், 45 விருதுகள், 17 ஆண்டுகள் தமிழ் சினிமாவை கலக்கும் சென்னை பொண்ணு த்ரிஷா!
- Technology
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.!
- Finance
இது மிக மோசமான ஆண்டு.. ஆட்டம் காணும் தொலைத் தொடர்பு துறை.. கதறும் வோடபோன் ஐடியா, ஏர்டெல்..!
- Education
IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு!
- Lifestyle
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...
மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரபல மாடல் கார்களின் விலைகள் அடுத்த மாதத்தில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த விலை அதிகரிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு கார்களும் அவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களுக்கு ஏற்றவாறு விலை அதிகரிப்பை பெறவுள்ளன என்று மட்டும் நிறுவனத்தின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் வெறும் ரூ.2.89 லட்சம் மட்டுமே விலை கொண்ட ஆல்டோ மாடலில் இருந்து ரூ.11.47 லட்சம் வரை விலை கொண்ட எக்ஸ்எல்6 மாடலை வரை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலைகளாகும்.

இந்த விலைகள் அனைத்தும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களை சார்ந்தது என்று ஏற்கனவே மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்திருந்தது. இதே கொள்கையை தான் அடுத்த மாதம் முதல் அனைத்து மாடல்களிலும் கொண்டுவரப்படவுள்ள விலை அதிகரிப்பிலும் பயன்படுத்தவுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரத்தில், மாருதி சுசுகி நிறுவனம் 1.44 லட்சம் கார்களை கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 1.46 லட்சம் விற்பனையான 2018 நவம்பர் மாதத்தை விட 1.6% குறைவாகும். வெளிநாட்டு சந்தை விற்பனையையும் சேர்த்து பார்த்தால், கடந்த மாதத்தில் 1.51 லட்சம் மாருதி சுசுகி கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 2018 நவம்பரை விட 1.9% குறைவாகும்.

மாருதி சுசுகி நிறுவனம் மட்டுமின்றி டாடா, ஹோண்டா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் கடந்த மாதத்தில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சில நிறுவனங்கள் விற்பனையில் முன்னேற்றத்தையும் கண்டுள்ளன. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.
இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய நிலை இதுதான்... நவம்பர் மாதத்திற்கான கார் விற்பனை நிலவரம்

2019 ஜூலை- செப்டம்பர் இடையிலான காலாண்டில் மாருதி நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.1,359 கோடியாகும். அதுவே 2018ஆம் ஆண்டு இதே காலாண்டில் ரூ.2,240 கோடி இலாபத்தை ஈட்டியிருந்தது. இதன்மூலம் 39 சதவீத இலாப வீழ்ச்சியை மாருதி நிறுவனம் இந்த காலாண்டில் அடைந்துள்ளது தெரிய வருகிறது.

இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதத்திலும் மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை அதிகரித்து இருந்தது. ஆனால் இந்த விலை அதிகரிப்பு பெரிய அளவில் இல்லை. அனைத்து மாடல்களின் விலைகளிலும் வெறும் 689 ரூபாயை மட்டும் அதிகரித்து இருந்தது. இந்திய அரசாங்கம் கொண்டுவந்த புதிய நம்பர் ப்ளேட் சிஸ்டம் தான் இந்த சிறிய விலை அதிகரிப்பிற்கு காரணம்.

1983ஆம் ஆண்டு மாருதி 800 மாடலின் விற்பனையின் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காலடி எடுத்து வைத்த இந்நிறுவனம் கடந்த 37 வருடங்களில் சுமார் 20 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.
இந்தியாவில் 2 கோடி கார்களை விற்பனை செய்து மாருதி புதிய சாதனை

மாருதி சுசுகி நிறுவனத்தின் விலை அதிகரிப்பிற்கு பிஎஸ்6 மாற்றம் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும், ஆட்டோமொபைல் துறையில் நிலவிவரும் மந்த நிலையால் இந்நிறுவனத்திற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டமும் ஒரு காரணமே. ஒவ்வொரு காரின் விலையும் எவ்வளவு அதிகரிக்கப்படவுள்ளது என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.