Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!
நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாட்டின் ஜாம்பவான வாகன உற்பத்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்திய ஆட்டோமொபைல்துறை நடப்பு ஆண்டு தொடங்கிய முதல் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் விற்பனை வீழ்ச்சி மற்றும் நிதியிழைப்பைச் சந்தித்து வருகின்றது.
இந்திய வாகனத்துறையின் இத்தகைய நிலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அந்தவகையில் பண மதிப்பிழப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியிருந்தார். அப்போது, "ஓலா மற்றும் ஊபர் ஆகியவற்றின் அதிக புழக்கத்தின் காரணமாக இந்திய வாகனத்துறை மந்த நிலையைச் சந்தித்து வருவதாக கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், இளைஞர்கள் இஎம்ஐ செலுத்தி வாகனத்தை வாங்குவதற்கு பதிலாக பொதுவாகனங்களைப் பயன்படுத்துவதன் காரணமாகவும் இத்தகைய சூழல் நிலவி வருகின்றது என்று கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த பதில் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆகையால், இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் இந்திய இயக்குநர் சஷாங் ஸ்ரீவஸ்தா பதிலளித்துள்ளார்.
அதில், "ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அப்போது, இந்த மந்த நிலை இந்தியாவில் நிலவவில்லை. அதேசமயம், தற்போதைய விற்பனைச் சரிவு கடந்த 2018ம் ஆண்டு இறுதியின்போதே தொடங்கியது. இதன் வீரியம் நடப்பு ஆண்டு முதலே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஓலா மற்றும் ஊபர் இந்தியாவில் கால் தடம் பதித்தபோது, பெரும்பாலான இளைஞர்கள் அதில் இணைந்துக் கொண்டு பணியாற்ற தொடங்கினார். எனவே, அப்போது இந்திய வாகனத்துறை நல்ல வளர்ச்சியை அடைந்தது" என தெரிவித்தார்.
தொடர்ந்து ஓலா, ஊபர் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே தற்போதைய இந்தியா வாகனத்துறையின் மந்தமான நிலைக்கு காரணம் என்று முழுமையாக கூறிவிட முடியாது. இதனை நாம் ஆராய்ந்து பார்த்துவிட்டுதான் கூற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ள இந்த கருத்து வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதுவரை காணாத அளவிலான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, தற்காலிக பணியாளர்களை வெளியேற்றுதல், உற்பத்தியைக் குறைத்தல் உள்ளிட்ட பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.