Just In
- 3 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 3 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 4 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 7 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பழைய கார் அழிப்பு ஆலையை இணைந்து அமைக்கும் மாருதி - டொயோட்டா!
பழைய கார்களை அழிப்பதற்கான ஆலையை இணைந்து அமைப்பதற்கு மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணி திட்டமிட்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, பழைய கார்களை அழிப்பதற்கான புதிய திட்டத்தை வகுத்து வருவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன்மூலமாக, புதிய கார்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இதனை மனதில் வைத்து பழைய கார்களை அழிப்பதற்கான ஆலையை அமைக்கும் முயற்சியில் மாருதி சுஸுகி - டொயோட்டா கூட்டணி இறங்கியுள்ளது. மாருதி நிறுவனமும், டொயோட்டா கார் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் டொயோட்டா சூஸோ நிறுவனமும் இணைந்து இந்த புதிய கார் அழிப்பு ஆலையை அமைக்க உள்ளன.
கார்களை அழித்து அதன் பாகங்களையும், உலோக பொருட்களையும் விற்பனை செய்யும் பொறுப்பை இந்த புதிய நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. டொயோட்டா சூஸோ நிறுவனம் ஏற்கனவே கார் உதிரிபாகங்கள் சப்ளை மற்றும் உலோக பாகங்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.
இதனால், இந்த புதிய ஆலையை வெற்றிகரமாக செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் பொதுத் துறை நிறுவனத்துடன் இணைந்து கிரேட்டர் நொய்டாவில் கார் அழிப்பு ஆலையை அமைத்துள்ளது.
இந்த ஆலையில் பிரித்து எடுக்கப்படும் கார் உதிரிபாகங்கள் மற்றும் உலோக உதிரிபாகள் விற்பனை செய்யப்படுவதுடன், சில பாகங்கள் மறுசுழற்சி செய்தும் பயன்படுத்தப்படும்.
பழைய கார்களை அழிப்பதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலமாக, பழைய காரை அழிப்பதற்கு கொடுக்கும் வாடிக்கையாளர்கள் புதிய கார்கள் வாங்கும்போது சிறப்புத் தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை வழங்குவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
இதன்மூலமாக, பழைய வாகனங்களிலிருந்து வெளியேறும் அபரிமிதமான நச்சுப் புகையை கட்டுப்படுத்த முடிவதுடன், பராமரிப்பு குறைவான பழைய வாகனங்கள் மூலமாக ஏற்படும் விபத்துக்களையும் தவிர்க்கும் வாய்ப்பு ஏற்படும். புதிய கார்களின் விற்பனையும் ஊக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Timesofindia
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!