ஹூண்டாயை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பென்ஸ்... கவலையில் ரசிகர்கள்!
ஹூண்டாய் நிறுவனத்தைத் தொடர்ந்து, பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால், தற்போது அது விற்பனைச் செய்து வரும் அனைத்து வாகனங்களும், அதன் விலையிலிருந்து 3 சதவீதம் உயர்வைப் பெற இருக்கின்றது.

இந்த அதிரடி விலையுயர்விற்கு உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பே முக்கிய காரணம் என அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, செஸ் மற்றும் எரிபொருள் மீதான கலால் வரி உள்ளிட்டவற்றாலும், இந்த விலையுயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் ரூ. 31.72 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கின்றது. அதேசமயம், ரூ. 2.55 கோடி வரையிலான விலைக் கொண்ட கார்களையும் அந்நிறுவனம் இங்கு விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதில், அதிக விலைக் கொண்டதாக அந்நிறுவனத்தின் எஸ்63 ஏஎம்ஜி கூபே கார் இருக்கின்று.

மேலும், இந்த விலையுயர்வினால் கலக்கம் கொண்டுள்ள, அதன் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில், வேறொரு சலுகைகையை வழங்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.

அந்தவகையில், இந்த வாகன உற்பத்தி நிறுவனம், அதன் கார்களுக்கான வட்டி விகிதத்தை 7.99 சதவீதத்திலிருந்து ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், விலையுயர்வினால் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இதுதவிர, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களை லீஸ் முறையில் பயன்படுத்தும் திட்டத்தையும் அந்நிறுவனம் இந்தியாவில் தொடங்க இருக்கின்றது. ஆகையால், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்களை, தேவைப்படும் வரை லீஸ் எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இத்துடன், மலிவு விலையில் சர்வீஸ் மற்றும் கூட்டப்பட்ட வாரண்டியையும் பென்ஸ் சொகுசு கார்களுக்கு வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், காரை வாங்குவதற்கு முன்பும் சரி, வாங்கிய பின்பும் சரி, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான நாங்கள் வழங்குவோம் என்பதை விளக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் க்ராஸ்ஓவர் ஸ்டைலிலான 7 சீட்டர் எஸ்யூவி ரக காரை அண்மையில் உலகிற்கு அறிமுகம் செய்திருந்தது. இந்த காரை, ஏ கிளாஸ் ரக கார்களை தயார் செய்யும் அதே பிளாட்ஃபார்மில் வைத்துதான் அந்நிறுவனம் தயார் செய்து வருகின்றது.

ஆகையால், ஏ கிளாஸ் ரக மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் காணப்படும் அனைத்து சொகுசு மற்றும் நவீன அம்சங்களும் இந்த காரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜிஎல்பி என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் இரண்டு மாடல்களில் கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில், ஜிஎல்பி 250 மற்றும் ஜிஎல்பி 200 ஆகிய மாடல்களில்தான் இந்த கார் கிடைக்க இருக்கின்றது.

இதில், ஜிஎல்பி 250 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது, அதிகபட்சமாக 224 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸில் இயங்க இருக்கின்றது.
அதேபோன்று, ஜிஎல்பி 200 மாடலில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இடம்பெற உள்ளது. இது, 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வழங்கும். இதில், 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








