Just In
- 29 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல கார் நிறுவனங்கள்..
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு ஒருவரை ஒருவரை ட்ரோல் செய்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
சொகுசு கார் ஆட்டோமொபைல் துறையின் ஜாம்பவான்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய இரு நிறுவனங்களுக்கும் மத்தியில் தற்போது போர் தொடங்கியுள்ளது. இது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் நடைபெற்று வருகின்றது.
மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் புகழ்வாய்ந்த தினங்களில் ஒன்றான ஹாலோவீன் என்ற நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட புகைப்படத்தால் இரு நிறுவனங்களுக்கு இடையேயான போர் ஆரம்பப் புள்ளியை கண்டுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு எப்போதும் போட்டிக் கொடுக்கின்ற வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் அமைகின்றன. இதன்காரணமாக, எப்போதும் இவ்விரு நிறுவனங்களுக்கும் மத்தியில் வர்த்தக போர் தொடர்ச்சியாக நிலவி வருகின்றது. இந்நிலையில், தற்போது மீம்ஸ் போர் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு பிஎம்டபிள்யூ நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரபல மாடலை ஹாலோவீனாக பயன்படத்தி, புகைப்படத்தை வெளியிட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் அது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஹாலோவீன் தினைத்தைக் குறிப்பிடும் வகையில், பென்ஸ் கார் ஒன்று பிஎம்டபிள்யூவின் போர்வை போர்த்திக் கொண்டிருப்பதைப் போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன், "இப்போது எந்தவொரு காராலும், அதன் சூப்பர் ஹூரோவின் உடையை அணிந்துக் கொள்ள முடியும்" என்ற கருத்தையும் அது கூறியிருந்தது.
இதனை, @MercedesBenzUSA #HappyHalloween from #BMW" ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி அது பதிவிட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, மெர்சிடிஸ் பென்ஸின் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஆகையால், பலர் பென்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக பேசும் வகையில், பதிவுகள் மற்றும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், ஒரு சில வாடிக்கையாளர்கள், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களை ட்ரோல் செய்கின்ற வகையிலான புகைப்படங்களை வெளியிட்டு, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், வாடிக்கையாளர்கள் பகிர்ந்த ஒரு சில புகைப்படங்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பகிர்ந்திருந்துள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம், பென்ஸ் நிறுவனத்தை நகைச்சுவை செய்வதற்காக பயன்படுத்திய கார் ஏஎம்ஜி இ53 மாடல் என கூறப்படுகின்றது. இதன்மீது போர்வையாக போர்த்தப்பட்டது பிஎம்டபிள்யூ எம்5 மாடலுடைய மாதிரி கவராகும். இவர்களுக்கு இடையேயான இந்த போர், நெட்டிசன்களுக்கு நல்ல விருந்தாக மாறியுள்ளது. மேலும், இதை வைத்து நகைப்பு மீம்களையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!