உச்சகட்ட எதிர்ப்பில் மோடி: திட்டத்தை செயல்படுத்த முடியாமல் பாஜக கவலை.. மேற்குவங்கத்துடன் இணைந்த மபி
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவ ஆரம்பித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை மக்களுக்கு இணையாக இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. வாகனங்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துக் கொண்ட இருக்கின்றதோ, அதற்கேற்ப வகையில் அதைச் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அதில், மிக முக்கியமானதாக போக்குவரத்து விதிமீறல்கள் இருக்கின்றன. விதிமீறல்கள் அதிகரிப்பால், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் முறையாக விதிகளைக் கடைபிடிக்காமல் இருப்பதும் ஓர் முக்கிய காரணமாகும். மேலும், இது இந்தியாவிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக தற்போது மாறியுள்ளது.

ஆகையால், போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க வைக்கின்ற வகையிலான முயற்சியில் அரசு செயல்பட்டு வருகின்றன.
அந்தவகையில், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக பல கடுமையான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், போக்குவரத்து விதிமீறல்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துகட்டும் வகையில், முன்னதாக விதிக்கப்பட்டு வந்த விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்தி மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இது, நேற்று (செப்டம்பர் 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றது. ஆகையால், முன்னதாக ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை ரூ.100-னை இன்று முதல் ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்பட உள்ளது. இதேபோன்று, அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விதியை மேற்கு வங்கம் மாநிலத்தில் அமலுக்குக் கொண்டு வரமாட்டோம் என திட்ட வட்டமாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலமும், புதிய வாகன மோட்டார் வாகனச் சட்டத்தை, அம்மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமான, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அண்மையில் ஒப்புதல் பெற்றது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் இன்று முதல் அது அமலுக்கு வந்துள்ளது.

ஆனால், நாட்டின் இரு மாநிலங்களிலும் மட்டும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளன. அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தியிருப்பது ஊழலுக்கு வழிவகைச் செய்யப்படும் என பலரால் கூறப்படுகின்றது.

முக்கியமாக, குற்றவாளிகளை விடுவிக்க சில காவல் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடலாம் சந்தேகிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, பலர் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், புதிய அபராதத் தொகை பல மடங்கு இருப்பதால், வாகன ஓட்டிகள் முறைகேட்டில் ஈடபட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இதனால், அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் விபத்தின் எண்ணிக்கையும் குறையும் என்பதால் சில மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளித்ததுள்ளன.
ஆனால், மேற்கு வங்கமும் இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசமும் தற்போது மோடி அரசின் இத்திட்டத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளன. இதுகுறித்து, அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பிசி ஷர்மா தெரிவிக்கையில்,

"புதிய அபராதம் மிக அதிக தொகைக் கொண்டதாக இருக்கின்றது. மத்திய அரசு புதிய மோட்டார் விதியை மறுஆய்வு செய்ய வேண்டும். ஆகையால், மாநிலத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கான அறவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, நேற்று முதல் (செப்டம்பர் 1) மத்திய அரசின் புதிய போக்குவரத்து விதிகள் இங்கு பொருந்தாது. இது குறித்து விவாதிக்கப்படும்" என்றார்.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் நிலவி வருவதால், மோடி அரசு பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications