Just In
- 20 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் சந்தையில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் கார் இருந்து வருகிறது. நேர்த்தியான டிசைன், சிறப்பான கட்டமைப்பு தரம், செயல்திறன் மிக்க எஞ்சின்கள் என சிறந்த மிட்சைஸ் செடான் கார் மாடலாக கூறலாம்.
ஆனால், ஸ்கோடா நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக, இந்த காருக்கு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருந்து வருகிறது.
இந்தியாவில் தற்போது 92 முதல் 95 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்தப்பட்டு வருவதாக ஸ்கோடா தெரிவிக்கிறது. இதன்மூலமாக, போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் தனது தயாரிப்புகளை நிலைநிறுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புரொஜெக்ட் 2.0 திட்டத்தின்மூலமாக இந்தியாவில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு இதுவரை நிலவும் குறைபாடுகள் சரிசெய்யப்பட இருக்கின்றன. இதற்கு வலு சேர்க்கும் விதத்தில், பல புதிய மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
அந்த வகையில், எம்க்யூவி ஏ0 ஐஎன் பிளாட்ஃபார்மில் புதிய எஸ்யூவி மாடல்களையும், இதர வகை கார்களையும் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், அனைவரின் ஆவலையும் தூண்டும் வகையில் புதிய செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆம். புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் காரின் இந்திய வருகை விபரம் குறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ரேபிட் காரை ஏற்றுமதி செய்யவும் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். ஆனால், டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படாது.
புதிய ஸ்கோடா ரேபிட் கார் வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார்களுடன் இந்த கார் போட்டி போடும்.
Source: Autocarindia
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு