Just In
- 40 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!
சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவித்து வரும் பெட்ரோல், டீசல் கார்களை ஒழிப்பதற்கான முதல்கட்ட முயற்சிகள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு மாற்றாக வாகனங்களுக்கான தீங்கு இல்லாத எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மோட்டார் உலகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
தற்போதைக்கு ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சமுதாயமும், ஹைப்ரிட் எரிபொருள் வகை வாகனங்களும், பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுமே சிறந்த தீர்வாக கருதுகின்றன. இதற்கு தக்கவாறு இந்த வாகனங்களுக்கான எரிபொருள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தீவிரம் கவனம் செலுத்தி வருகின்றன.
இருப்பினும், அதிக தூரம் தங்கு தடையில்லாமல் பயணிப்பதற்கான வாய்ப்பை ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய தொழில்நுட்பத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் கண்டறிந்துள்ளது.
அண்மையில் நடந்த நியூயார்க் ஆட்டோ ஷோவில், ஹைப்ரிட் வகையில் இயங்கும் புதிய சொனாட்டா காரை ஹூண்டாய் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த காரின் கூரையில் சோலார் பேனல்கள் பதிக்கப்பட்டு இருந்தது எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது, கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைக்கு இது ஆரம்ப கட்ட முயற்சிதான்.
இந்த ஹைப்ரிட் காரில் இருக்கும் பெட்ரோல் எஞ்சினுடன் இருக்கும் சிறிய மின் மோட்டாருக்கு தேவைப்படும் மின்சாரத்தை சிறிதளவு கூடுதலாக வழங்கும் வகையில் இந்த சோலால் பேனல்கள் செயல்படும்.
இந்த காரில் 152 எச்பி பவரையும், 188 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுக்கு துணையாக 52 எச்பி பவரை அளிக்க வல்ல மின் மோட்டார் உள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. ஆக்டிவ் ஷிப்ட் கன்ட்ரோல் சிஸ்டம் மூலமாக கியர் மாற்றம் நிகழும் நேரத்தை 30 சதவீதம் குறைக்கிறது.
இந்த ஹைப்ரிட் எரிபொருள் வகை காருக்கு சூரிய ஒளி மூலமாக கிடைக்கும் மின்சக்தி சிறிதளவு கூடுதல் பயண தூரத்தை வழங்கும். அதாவது, ஆண்டுக்கு 1,300 கிமீ கூடுதலாக பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
இதனை மேம்படுத்தி, அதிக திறன் வாய்ந்ததாக மாற்றும்போது அதிக தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும். தனது பிற கார் மாடல்களிலும் கூரையில் சோலார் பேனல் பொருத்தும் முறையை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.