Just In
- 11 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?
மத்திய அரசின் அதிரடி முடிவால் நல்ல காரியம் நடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை செய்து அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
முன்பு அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டினால் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையும் 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் 1,000 ரூபாயும், செல்போனில் பேசி கொண்டு வாகனங்களை இயக்கினால் 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையையும் மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
எனினும் மத்திய அரசு அதனை பொருட்படுத்தவில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி இது என மத்திய அரசு பதில் அளித்தது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு உறுதியாக அமல்படுத்தியதால் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறைந்து வருகின்றன.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு சண்டிகரில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் 35 சதவீதம் குறைந்துள்ளன. சண்டிகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 40,405 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன.
சண்டிகர் போக்குவரத்து போலீசார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். சண்டிகர் போக்குவரத்து போலீசார் கடந்த ஜனவரி மாதம் 20,738 செல்லான்களையும், பிப்ரவரி மாதம் 26,137 செல்லான்களையும், மார்ச் மாதம் 30,567 செல்லான்களையும் வழங்கியிருந்தனர். அதே சமயம் ஏப்ரல் மாதம் 26,565 செல்லான்களும், மே மாதம் 23,945 செல்லான்களும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்பட்டிருந்தன.
அதே நேரத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முறையே 21,703 மற்றும் 24,347 செல்லான்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20,628 பேருக்கு செல்லான்கள் வழங்கப்பட்டன. இதன்பின்பு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த முதல் மாதமான செப்டம்பரில் 17,771 செல்லான்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன்பின் அக்டோபர் மாதம் பண்டிகை காலம் என்பதால், போக்குவரத்து விதிமுறை மீறல்கள் சற்று அதிகரித்தது. அந்த மாதத்தில் 22,634 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்விரு மாதங்களிலும் ஒன்றாக சேர்த்து 40,405 செல்லான்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி பார்த்தால் சண்டிகரில் போக்குவரத்து விதிமீறல்கள் 35 சதவீதம் குறைந்துள்ளன. இந்த 40,405 செல்லான்களில் அதிகபட்சமாக ஜீப்ரா லைன் விதிமுறை மீறலுக்காக 10,111 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்களுக்கு 8,939 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 8,939 பேரில், பெண்கள் மற்றும் பில்லியன் ரைடர்களின் எண்ணிக்கை 1,912. இதுதவிர தவறான இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்த காரணத்திற்காக 4,718 பேருக்கும், அபாயகரமான முறையில் யூ-டர்ன் எடுத்த காரணத்திற்காக 3,624 செல்லான்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த டேட்டாவை சண்டிகர் போக்குவரத்து போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!