வருகிறது புதிய அதிரடி உத்தரவு... மீறினால் உங்கள் கார் ஏலம் விடப்படும்... அட போங்க பாஸ்!!!
விரைவில் புதிய உத்தரவு ஒன்று நடைமுறைக்கு வரவிருக்கின்றது. இதனை மீறும் பட்சத்தில் உங்கள் கார் தேசிய நெடுஞ்சாலை ஆணயத்தின்மூலம் ஏலம் விடப்படலாம். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக முறையற்ற பார்க்கிங் நிறுத்தங்கள் மாறியுள்ளன. இதனால், போக்குவரத்து ஸ்தம்பிப்பதுடன், கணப் பொழுதில் எதிர்பார்க்க முடியாத அளவிலான போக்குவரத்து நெரிசலையே ஏற்படுத்திவிடுகின்றன.

அண்மைக் காலங்களாக போக்குவரத்து விதிமீறல்கள் எந்தளவிற்கு அதைச்சார்ந்து இயங்கும் துறைகளுக்கு அதிகளவில் தலை வலியை ஏற்படுத்தி வருகின்றதோ, அதே அளவில் முறையற்ற வாகனங்களின் பார்க்கிங் செயலும் அதன் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

சாதரணமாக ஒரு நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் என்பது அந்நகரத்தின் முக்கிய சாலைகளுடைய செயல்பாட்டையே முழுமையாக முடக்கிவிடும்.
அதுவே தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை எடுத்துக் கொண்டால், இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பையே முடிக்கிவிடும். அந்தளவிற்கு தீவிரம் கொண்டாதக முறையற்ற பார்க்கிங் செயல்பாடு இருக்கின்றது.

ஆகையால், இந்த விதிமீறலுக்கு தீர்வு காணும் விதமாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்எச்ஏஐ) புதிய அதிகாரம் வழங்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, முறையற்ற நிலையில் நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனை வழங்கும் உரிமை வழங்கப்பட உள்ளது.

அவ்வாறு, என்எச்ஏஐ விதிக்கும் அபராத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு செலுத்தாவிட்டால், அந்த வாகனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க்பபட உள்ளது. அந்தவகையில், வாகனத்தை பறிமுதல் செய்தல் மற்றும் அதனை ஏலத்தில் விட உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன.

தற்போது வரை, நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, விதிமீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பதற்கோ அல்லது தண்டனை வழங்கவோ அதிகாரம் இல்லை. ஆனால், சர்வீஸ் ரோடு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் வாகனங்களை அப்புறுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மட்டும் அது மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், இந்த புதிய அறிவிப்பின்மூலம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கு கூடுதல் பொறுப்பு கிடைக்க உள்ளது. ஆகையால், இனி வரும் காலங்களில், நெடுஞ்சாலைகளில் விதிமீறும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்டவற்றை வழங்க இருக்கின்றது.

தேசிய நெடுஞ்சாலைகள் (நிலம் மற்றும் போக்குவரத்து) சட்டம் 2002, பிரிவு 24 மற்றும் 27 ன் கீழ், நிலம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை தொடர்பான அனைத்து பிரசினைகளுக்குமான தீர்வை அந்த துறையே மேற்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

இத்துடன் கூடுதலாக, போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், சமீபகலாமாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைக்கப்படும் என அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த தகவலின்படி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் அல்லது துணை பொது மேலாளர் மற்றும் மாநில பொதுப்பணித் துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவின் நிர்வாக பொறியாளர் ஆகியோர் நெடுஞ்சாலையின் அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் கண்கானிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications








