Just In
- 49 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 55 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கலாம் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ள சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக இந்தியா பெரும் தொகையை செலவிட்டு வருகிறது. பொருளாதாரத்தில் இது உண்டாக்கும் தாக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது.
அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களை குழப்பும் வகையில் உள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை தற்போது திணறி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார மந்த நிலை உள்பட பல்வேறு காரணங்களுக்கு மத்தியில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவும் இதற்கு முக்கியமான காரணம் என்பது ஆட்டோமொபைல் துறையின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த சூழலில் இந்தியாவை படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக நிதி ஆயோக் சமீபத்தில் பரிந்துரை ஒன்றை வழங்கியிருந்தது. இதன்படி வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மூன்று சக்கர வாகனங்களும் பேட்டரி மூலம் இயங்குபவையாக இருக்க வேண்டும் என நிதி ஆயோக் கூறியிருந்தது.
அதேபோல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 150 சிசி மற்றும் அதற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என நிதி ஆயோக் தெரிவித்திருந்தது.
இந்த வரிசையில் 2030ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் பரிந்துரைத்திருந்தது. அதாவது ஐசி இன்ஜின் (ICE - Internal Combustion Engine) வாகனங்களுக்கு இந்தியாவில் படிப்படியாக தடை விதிக்க வேண்டும் என்பதுதான் நிதி ஆயோக்கின் யோசனை.
நிதி ஆயோக் தெரிவித்த யோசனைக்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்திய மார்க்கெட்டில் தற்போது நிலவும் மந்த நிலையை கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பணிகளின் வேகத்தை சற்றே குறைத்து கொள்வது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்த சூழலில் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளபடி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது கூறியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதனை நேற்று (ஆகஸ்ட் 23ம் தேதி) தெரிவித்தார்.
அத்துடன் வாகன தொழில்நுட்பத்தை தீர்மானிக்கும் அதிகாரம் நிதி ஆயோக்கிற்கு இல்லை எனவும் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதனை மார்க்கெட்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மீது அரசு எந்தவிதமான தொழில்நுட்பத்தையும் திணிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சுத்தமான வாகனங்களின் தேவையை குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவையை இண்ட்ஸ்ட்ரீ புறக்கணிக்க முடியாது என்பதும் உண்மை எனவும் நிதின் கட்கரி கூறினார். அத்துடன் நமது கவனம் எல்லாம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதில்தான் இருக்க வேண்டும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தற்போது உள்ள சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த பேச்சு மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எதிர்காலம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் உள்ளது. இந்த அறிவிப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!