கிரெடிட் கார்ட் மூலம் பெட்ரோல் வாங்குபவர்களுக்கு சலுகைகள் நிறுத்தம்... வந்தது அதிரடி அறிவிப்பு
பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்ட் மூலம் பெட்ரோல் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லிட்டருக்கு 0.75% சலுகை வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஜிட்டல் மயம் இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்ததில் இருந்து கடந்த இரண்டரை வருடங்களாக வழங்கப்பட்டு வந்த இந்த சலுகை நிறுத்தப்படவுள்ளதாம். இதுகுறித்து SPI வங்கி நிறுவனம் மட்டும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் அவர்கள் கூறுகையில், டியர் SBI வாடிக்கையாளர்களே, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் கூறியுள்ள அறிவுறுத்தலின்படி, 1 லிட்டர் பெட்ரோலுக்கு வழங்கப்பட்டுவரும் 0.75%, அதாவது 1 லிட்டர் பெட்ரோலுக்கு 50 பைசா தள்ளுபடி என்கிற சலுகை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து வங்கி கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை நிறுத்தப்படுகிறது. ஆனால் டெபிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கு தொடம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் கேட்டு கொண்டதன் பேரில் கடந்த 2016 டிசம்பர் 13ல் இருந்து இந்தியன் ஆயில் கார்ப்பிரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தன.

இந்த சலுகையினால் மேலே கூறப்பட்ட மூன்று பெட்ரோல் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,165 கோடியையும் வங்கி நிறுவனங்களுக்கு ரூ.266 கோடியையும் வழங்கி வந்தன. இது 2017- 2018 ஆண்டில் மட்டும் தான். 2018- 2019 ஆண்டில் இப்போதே ரூபாய் 2000 கோடியை தாண்டிவிட்டதாம்.

சலுகை ஆரம்பித்த 2016ஆம் ஆண்டில் 10 சதவீதமாக இருந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை 2018ல் 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சலுகை மட்டுமல்லாமல் ரயில்வே நிர்வாகமும் டிக்கெட் புக் செய்வதற்கு, சாப்பாடு ஆர்டர் செய்வதற்கு, வைட்டிங் ரூம்மிற்கு என பல வகைகளில் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு சலுகைகளை வழங்கியுள்ளது.

500, 1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளியான பிறகு சரியாக 1 மாதம் கழித்து இந்த சலுகை குறித்த அறிவிப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








