Just In
- 5 min ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- 1 hr ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- 1 hr ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 3 hrs ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
Don't Miss!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- Movies Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...
சிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து, டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசை, வாகன ஓட்டிகள் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகத்தில் வரும் என்பதால், கூடுதல் கவனத்துடன்தான் பயணிக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, சிறிய தவறை செய்தால் கூட பெரும் விபத்தில் சிக்கி கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் சிறிய சிறிய தவறுகளை செய்வதன் காரணமாகதான், விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
இந்த சூழலில் கார் டிரைவர் ஒருவர் செய்த தவறின் காரணமாக, கார் மற்றும் கனரக லாரி ஆகிய இரண்டும் மோதி கொள்ளும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு விட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-48ல் நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது. அப்போது கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதன் முன்னால் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஆனால் காரின் டிரைவர் இடது பக்கத்தில் (Left Side) இருந்து லாரியை ஓவர்டேக் செய்ய முயன்றார். அப்போது லாரியும் திடீரென இடது பக்கம் நோக்கி திரும்பியது. இதன் காரணமாக கார் மற்றும் லாரி ஆகியவை மோதி கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.
இருந்தபோதும் கார் மற்றும் கனரக லாரி ஆகிய இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் சுதாரித்து கொண்டு வாகனங்களை உடனடியாக ஸ்லோ செய்து விட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் 2 வாகனங்களும் மோதி கொண்டிருக்கும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இடது புறத்தில் இருந்து கனரக லாரி போன்ற வாகனங்களை ஓவர் டேக் செய்வது எவ்வளவு அபாயகரமானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் காரின் டேஷ் போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவை ரிஷி சின்கா என்பவர் தற்போது யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளார். பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
வீடியோவை வைத்து பார்க்கையில், இந்த கார் மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் (Maruti Suzuki S-Cross) ஆக இருக்கலாம் என தெரிகிறது. அதிர்ஷ்டவசமாகதான் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து நேரங்களிலும் அதிர்ஷ்டம் கை கொடுக்காது என்பதை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
-
900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!