Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தேர்தலுக்கு பின் நடக்கப்போகும் கடும் அதிர்ச்சி சம்பவம் இதுதான்... உச்சகட்ட பதற்றத்தில் இந்திய மக்கள்
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் முடிந்த பிறகு கடும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடக்கவுள்ளது. இதனால் மக்கள் பதற்றத்தில் உறைந்துள்ளனர்.
சர்வதேச அளவில், பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவிடம் பெரிய அளவில் கச்சா எண்ணெய் வளம் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கியமான காரணம்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தை பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு வரை 2 வாரங்களுக்கு ஒரு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்பு, பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்தன.
ஏனெனில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 80 டாலர்களை கடந்ததால், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் எரிபொருளின் விலையை சுமார் 10 ரூபாய் வரை அப்போது உயர்த்தி விட்டன. இதற்கு எதிராகதான் போராட்டங்கள் வெடித்தது. அத்துடன் பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் வரிகளை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளும் அப்போது முன் வைக்கப்பட்டன.
இதற்கு மத்திய அரசு பெரிய அளவில் செவி சாய்க்கவில்லை என்றாலும், சற்றே வரிகளை குறைத்தது. ஒரு சில மாநில அரசுகளும் வரிகளை குறைத்தன. இதனால் பெட்ரோல், டீசல் விலை ஓரளவிற்கு குறைந்தது. என்றாலும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்த அளவிற்கு விலை குறைக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று, நடப்பாண்டில் அதிகபட்ச விலையை கச்சா எண்ணெய் எட்டியது. சர்வதேச சந்தையில் கடந்த 6 வாரங்களில் மட்டும் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு சுமார் 9 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. இதற்கு ஈரான்-அமெரிக்கா இடையேயான பிரச்னையும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஈரானுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதாவது 2018ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதிக்கு பின்பு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளிடம் அமெரிக்கா கூறியிருந்தது. இதன்பின் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த 6 மாத காலத்திற்குள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்திருந்தது.
இந்த 6 மாத கால நிபந்தனை வரும் மே 1ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதன்பின்பும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என சமீபத்தில் அமெரிக்கா அறிவித்து விட்டது. இதன் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு வித நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருவதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இதன் தாக்கம் இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை. இதற்கு தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ம் தேதியன்று நடைபெற்றது. 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் மே 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
எனவே தேர்தல் முடியும் வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில் தாமதம் செய்து வருவது ஏன்? என்பதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பதில் அளிக்க தயாராக இல்லை.
தேர்தல் முடியும் வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிடம் இருந்து ஏதேனும் அழுத்தம் தரப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கவும் அவர்கள் தயாராக இல்லை. முன்னதாக கடந்த ஆண்டு மத்தியில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது சுமார் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் விலை உயர்த்தப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
எனவே இதே பாணியில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை உயர்வை தாமதப்படுத்தி வருவதால் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் லாப இழப்பு ஆகியவற்றை ஈடுகட்டும் வகையில் இந்த விலை உயர்வு இருக்க கூடும் என கூறப்படுகிறது. அதாவது வட்டியும், முதலுமாய் வசூல் செய்யப்படலாம். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ET Autoதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்திந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பின் (All India Petroleum Dealers Association) பொருளாளர் நிதின் கோயல் இதுகுறித்து கூறுகையில், ''மிகப்பெரிய அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை காண நுகர்வோர்கள் தயாராக இருக்க வேண்டும். கர்நாடக தேர்தலுக்கு பிறகு நாம் கண்ட அளவிற்கு இந்த விலை உயர்வும் இருக்கும்'' என்றார்.
ஆக மொத்தத்தில் தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சி அமைத்தாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையை சமாளிப்பதே அவர்களுக்கான முதல் சவாலாக இருக்கும். இதுதவிர நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே குறிப்பிட்டபடி கச்சா எண்ணெய் என்ற விஷயத்தில் இந்தியா கிட்டத்தட்ட இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் நாடுகளில் ஒன்றாகும்.
இப்படிப்பட்ட சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அதிக பண வீக்கம், பட்ஜெட் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். எனவேதான் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். புதிதாக அமையவுள்ள மத்திய அரசு இதனை எப்படி எதிர்கொள்ள போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Note: Images used are for representational purpose only.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!