Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு!
இந்தியாவில் டீசல் கார் விற்பனையை நிறுத்த ரெனோ கார் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் இந்தியர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், க்விட் மற்றும் ட்ரைபர் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், டஸ்ட்டர், கேப்ச்சர் மற்றும் லாட்ஜி கார்கள் பெட்ரோல் மட்டுமின்றி, டீசல் மாடல்களிலும் கிடைக்கின்றன. இந்த கார்களில் பயன்படுத்தப்படும், 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் போன்றே இந்தியர்கள் மத்தியில் அதிக மதிப்பை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர விதிகளுக்கு நிகரான பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்த நிலையில், தனது 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் நோக்கம் ரெனோ கார் நிறுவனத்திடம் இல்லை.
அண்மையில் நடந்த ட்ரைபர் கார் அறிமுக விழாவில் ரெனோ இந்தியா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மம்மில்லபில்லே இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பின்னர் பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வெங்கட்ராம் கூறுகையில்,"புதிய மாசு உமிழவு விதிகளுக்கு நிகராக டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு ரூ.2 லட்சம் வரை கூடுதல் செலவாகும். மேலும், பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் விலை ரூ.3 லட்சம் வரை கூடுதலாக இருக்கும். எனவே, நிச்சயமாக வாடிக்கையாளர்களின் ஆதரவு வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
எனவே, ரெனோ நிறுவனம் தற்போது பயன்படுத்தும் பெட்ரோல் எஞ்சின்கள் தவிர்த்து, புதிய டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்களையும் ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பின்னர் இந்த புதிய எஞ்சின்கள் பொருத்தப்பட்ட கார்களை எதிர்பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி ஏற்கனவே சிறிய வகை டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ரெனோ கார் நிறுவனமும் டீசல் கார்களுக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், டொயோட்டா, ஹூண்டாய் கார் நிறுவனங்கள் டீசல்களை கார்களை தொடர்ந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.
Source: ET Auto