Just In
- 47 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாருதியை தொடர்ந்து இந்தியாவில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் ரெனோ!
கடுமையான மாசு உமிழ்வு விதிகளை மனதில் வைத்து, டீசல் கார் விற்பனையை இந்தியாவில் நிறத்துவதற்கு ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு இணையான தரத்தில் பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்தும் பணிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எனினும், டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, ரெனோ கார் நிறுவனமும் டீசல் கார் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று டெல்லியில் நடந்த புதிய ட்ரைபர் எம்பிவி கார் அறிமுக நிகழ்ச்சியின்போது இந்த தகவலை ரெனோ நிறுவனத்தின் சிஇஓ தியரி போலோர் தெரிவித்தார்.
இந்தியாவில் எமது டீசல் கார்களுக்கான வரவேற்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் டீசல் கார்களுக்கான மவுசு வெகுவாக சரிந்து வருகிறது. எனவே, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது டீசல் கார் உற்பத்தியை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
எங்களது உற்பத்தி பிரிவுகளில் பெட்ரோல், டீசல் என இரு கார்களையும் உற்பத்தி செய்யும் கட்டமைப்பு வசதி உள்ளது. எனவே, பெட்ரோல் கார்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்த முடியும். இதற்காக, சிறிய அளவிலான மாறுதல்கள் செய்ய வேண்டும். முதலீடும் மிக குறைவாகத்தான் இருக்கும்.
கடந்த காலத்தில் இந்திய வர்த்தகத்தில் சில தவறுகளை செய்துவிட்டோம். இந்தியாவில் நாங்கள் போதுமான முதலீடுகளை செய்து வருவதால், கூடிய விரைவில் இந்தியாவின் மூன்றாவது கார் நிறுவனமாக வளர்ச்சி பெறுவோம் என்று கூறி இருக்கிறார்.
ரெனோ நிறுவனத்தின் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் மிகவும் பிரபலமானது. நம்பகத்தன்மையையும் பெற்றிருக்கிறது. ரெனோ டஸ்ட்டர், லாட்ஜி, நிஸான் டெரானோ உள்ளிட்ட பல மாடல்களில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், இந்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கான வரவேற்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்த எஞ்சினை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டி இருக்கும் என்பதுடன், கார் விலையை கணிசமாக உயர்த்த வேண்டி இருக்கும். எனவே, மார்க்கெட்டில் எடுபடாமல் போனால் பெரிய அளவிலான நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால், இந்த முடிவை ரெனோ எடுத்துள்ளது.
எனினும், புதிய பெட்ரோல் கார்களை வைத்து தனது வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. வரும் 2022ம் ஆண்டில் தங்களது விற்பனை இரட்டிப்பாகும் என்று ரெனோ கணக்கு போட்டுள்ளது.
மேலும், புதிய ட்ரைபர் கார் மீது அதிக நம்பிக்கையை ரெனோ கார் நிறுவனம் வைத்துள்ளது. இது அதிக இடவசதி கொண்ட ஹேட்ச்பேக் கார் போல பயன்படுத்த முடியும் என்பதுடன், விலையும் மிக குறைவாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!